Devadhas நன்றி
சேரர்களின் ஆட்சியில் சேரநாட்டில் அயல்நாட்டு வணிகத்துக்கு தங்கநாணயங்கள் புழக்கத்தில் இருந்தது . இதற்கு Venetian sequins என பெயர். இத் தங்க காசுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. சுத்த தஙகம் ஆனதால் ஆபரணங்கள் செய்யவும் இத்தங்ககாசுகள் பயன் படுத்தினர். இக்காசுகளை திருவிதாங்கூர் அரசு மக்களை மிரட்டி பறித்து அவற்றை கோவில் வேள்வியில் நம்பூதிரிகளுக்கு அளித்தனர். இவற்றை கைப்பற்ற கடினமாக இருந்ததால் திவான் ரமணிங்கர் இத்தங்ககாசுகள் செல்லாது என அறிவித்துவிட்டு இதனைப் போன்று ஆங்கிலேய நாணங்களுடன் இரண்டு புதிய நாணயங்களை அடித்தனர். பழைய தங்கக்காசுகளை சாணார் காசு என குறிப்பிட்டுள்ளனர். தற்போது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ஆறு அறை நகைகள் கணக்கெடுப்பில் இக்காசுகள் 70கிலோ இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.
சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம் சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப
Comments
Post a Comment