அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் . தூத்துக்குடி மாவட்டம் கோயிலின் மூலவர் உற்சவர் விபரம் மூலவர் - அருள்மிகு பாலசுப்பிரமணியர் உற்சவர் - அருள்மிகு சண்முகர், ஜெயந்திநாதர், குமாரவிடங்கப்பெருமாள், அலைவாய் உகந்தபெருமாள் அம்மன் - அருள்மிகு வள்ளி ,அருள்மிகு தெய்வானை தீர்த்தம் - கந்தபுஷ்கரணி [நாழிக்கிணறு],சரவண பொய்கை தலமரம் - பன்னீர் மரம் பாடியவர்கள் - நக்கீரர், பகழிக்கூத்தர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வென்றிமாலைக் கவிராயர் பழமையும் சிறப்பும் - பெயர்க் காரணமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தின் தென் கோடியில் தலைசிறந்த கடற்கரைப்பட்டினமாக விளங்கிய கபாடபுரம், இன்றைய திருச்செந்தூர். திருச்செந்தூர் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப் பகுதியாகும். ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருந்ததால்அலைவாய் என்றும் முற்காலத்தில் அழைக...
ART - LITERATURE - CULTURE