அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் .
தூத்துக்குடி மாவட்டம்
கோயிலின் மூலவர் உற்சவர் விபரம்
மூலவர் - அருள்மிகு பாலசுப்பிரமணியர்
உற்சவர் - அருள்மிகு சண்முகர், ஜெயந்திநாதர், குமாரவிடங்கப்பெருமாள்,
அலைவாய் உகந்தபெருமாள்
அம்மன் - அருள்மிகு வள்ளி ,அருள்மிகு தெய்வானை
தீர்த்தம் - கந்தபுஷ்கரணி [நாழிக்கிணறு],சரவண பொய்கை
தலமரம் - பன்னீர் மரம்
பாடியவர்கள் - நக்கீரர், பகழிக்கூத்தர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வென்றிமாலைக் கவிராயர்
பழமையும் சிறப்பும் - பெயர்க் காரணமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தின் தென் கோடியில் தலைசிறந்த கடற்கரைப்பட்டினமாக விளங்கிய கபாடபுரம், இன்றைய திருச்செந்தூர்.
திருச்செந்தூர் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப் பகுதியாகும். ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருந்ததால்அலைவாய் என்றும் முற்காலத்தில் அழைக்கப்பட்டது. குறிஞ்சி நிலத்துக்குரிய முருகன், கடற்கரையில் எழுந்தருளியுள்ளார். சங்க நூல்களில் இத்தலம் அலைவாய்,செந்தில் என இரு பெயர்களால் அழைக்கப் படுகின்றது
.
1986 வரை திருநெல்வேலி மாவட்டத்திலும் தற்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகப்பிரிவிலும் உள்ள திருச்செந்தூர்,சங்ககாலத்தில் குட நாடு என்ற நிர்வாகப்பிரிவில் இருந்தது. ஊரின் மேற்கே பசுமையான வயல் வெளிகளும், தோட்டங்களும், தெற்கே உவர் நிலங்களும் காணப்படுகின்றன. இவ்விருவகை நிலங்களுக்கும் மகுடம் வைத்தாற்போல பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்று உள்ளது.வெள்ளைப் பவளப்பாறையால் ஆன இக் குன்று சந்தனாமலை என்று போற்றப்படுகிறது . குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான் இம் மலையில்அமர்ந்துள்ளார். இம்மலை மீது அமையப் பெற்ற 134 அக்கோபுரம் திருச்செந்தூருக்கு வெகு தொலைவில் வரும் போதே நம்மை வா...வா என்றழைக்கும்.கையெடுத்து தலை மீது வைத்துத் திசைநோக்கித் தொழ வைக்கும்.
பெயராய்வு
மக்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து இனங் காண பெயர்களை வழங்கியது போல தாங்கள் வசித்த இடத்திற்கும் பெயரிட்டுப் பெருமை கொண்டனர். இயற்கையோடு தங்கள் வாழ்வு நெறி முறைகளை இணைத்துக் கொண்டனர். இயற்கையோடுதங்களுடைய தங்களுடைய தெய்வங்களை வழிபட்டுக் கொண்டனர். இயற்கைப் பெயரினை தாங்கள் வாழ்ந்த இடத்திற்கு இட்டுக் கொண்டனர். இவ்வடிப்படையிலேயே திருச்செந்தூர் என்ற பெயர் பல்வேறு மாற்றங்களைப் பெற்று உருவாயிற்று.
கபாடபுரம்
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாண்டிய மன்னர்களின் இரண்டாம் தமிழ்ச்சங்கம் செயல்பட்ட கபாடபுரம் என்ற தமிழூர் திருச்செந்தூர் ஆகும். கபாடம் என்றால் முத்து. உலகம் போற்றிய ஒளிவிடும் முத்து விளைந்த பகுதியாக கடற்பகுதியாக முன்னாளில் விளங்கியது.
திருச்செந்தூரில் காணப்படும் கல்வெட்டொன்று, ‘திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று இவ்வூரைக்குறிப்பிடுகிறது. இப்பெயரும் வழக்கொழிந்து போயிற்று.சதுர் வேதம் என்றால் நான்கு வேதங்களாகும்.நான்கு வேதங்களும் இடையறாது ஒலிக்கும் ஊர் என்றும்,அவ் வேதங்களை ஓதும் அந்தணர்களுக்கு [ வேதியர்களுக்கு ] தானமாகக் கொடுக்கப் பெற்றஊர் என்றும் பொருள்படும். வேதியர்களான திரிசுதந்திரர்கள் 2000 திருச்செந்தூரிலிருந்து முருகனுக்குத் தொண்டுசெய்து வந்தனர். இன்றும் அவர்களது வாரிசுகள் உள்ளனர்
தூண்டுகை விநாயகர் ஆலயம்
இவர் ‘தூண்டுகை விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். இவரை வழிபடும் பக்தர்கள் முன்பகுதியில் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள். இவரை வணங்கிய பின்னரே ஆலயத்துள் சென்று முருகப் பெருமானை வழிபட வேண்டும் .
கிரிவீதி
இந்த வீதியில் தான் தங்கரதம் வலம் வருகிறது. சிறப்புக் கட்டணம் செலுத்தி தங்கரதத்தினை வலம் வரச்செய்து, தங்களது நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள். வடக்குப்புறத்தில் வசந்த மண்டபம். வள்ளிக் குகையும் உள்ளன. இங்கு குழந்தைகளுக்கு காது குத்துகிறார்கள். தவிட்டுக்காக முருகனிடம் தன் குழந்தைகளை தத்து கொடுத்து அவர்களுடைய நல்வாழ்விற்காக வேண்டிக்கொள்கின்றனர். நாழிக்கிணறு அருகே பெரியவர்களும்,சிறியவர்களும் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செய்கின்றார்கள் .
வசந்த மண்டபம்
திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிர்புறமாக வசந்த மண்டபம் அமைந்திருக்கிறது. சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறும் வசந்த விழாவில் செந்தில் நாயகரான மூலவரின் உற்சவர் இங்கு ஜெயந்தி நாதராக எழுந்தருளுகிறார். மாசி, ஆவணித் திருவிழாக்களில் பக்தர்களின் சிறப்பு பூஜையை ஏற்பதற்காக எட்டாம் திருநாள் இரவில் ஆறுமுகப்பெருமான் இங்கே எழுந்தருளுகிறார். இந்த மண்டபம் 120 தூண்களைக் கொண்டது. 1882 இல்ஆண்டு காசி சுவாமிகளால் தொடங்கப்பட்டு, 1895ம் ஆண்டு மௌன சுவாமிகளால் கட்டிமுடிக்கப்பட்டது.
ஆனந்த விலாசம்
கடல் மட்டத்திலிருந்து ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே, பல தீர்த்தங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. மாசி, ஆவணித் திருவிழாக்களில் எட்டாம் திருநாளில் சண்முகர் பக்தர்களுக்கு இந்த ஆனந்த விலாசத்தில்தான் சிறப்பு வழிபாடு நிகழ்கின்றன.
வள்ளிக் குகை
கோயிலின் வடக்குப்புறத்தில், அம்மன் வள்ளிக் குகை உள்ளது. பவளப்பாறை மற்றும் மணற் படிவுப் பாறையினால் ஆன குடைவரை கோயிலாகும். முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. வட பக்கமுள்ள சுவரை, சூரசம்ஹார நிகழ்ச்சி ஓவியங்களாகச் சித்திரிக்கின்றன. வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜனும் அவனது படைவீரர்களும் முருகப்பெருமானுடன் போரிட வந்தபோது, வள்ளியம்மை, பயந்து ஒளிந்து கொண்டதுதான் இந்த குகை. இதனை ‘வள்ளி ஒளிந்த வளநாடு’ என்றும் குறிப்பிடுவார்கள். குகைக்குள் சென்று நாம் வழிபடலாம் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது.
சஷ்டி மண்டபம்
கந்தசஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளன்று வேல்வாங்கிய ஜெயந்திநாதர், சஷ்டி மண்டபத்தில் தங்கியிருந்து தன் படைவீரர்களோடு சூரனை அழிப்பதற்காக புறப்படுவார். இது கிரி வீதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
சண்முக விலாசம்
சுற்றுப்பிரகாரத்தில் முருகன் சந்நதிக்குச் செல்லும் வழியில் கோயிலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மண்டபம், சண்முக விலாசம். 120 அடி நீளம், 86 அடி அகலம் பரப்பில் 124 தூண்களைக் கொண்டிருக்கிறது. மூன்றடி உயரத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த 15 சதுர அடி பரப்புள்ள பலிபீடம் அமைப்பு உள்ளது. தூண்களே இல்லாமல் இம்மண்டபம், கட்டிடக்கலையின் சிறப்பைக்காணலாம்..
இவ்விடத்தில்தான் மாசி, ஆவணி திருவிழாக்களின் ஏழாம், எட்டாம் திருநாட்களில் சண்முகர் எழுந்தருளிவார்.
நாழிக்கிணறு
சண்முக விலாசத்தில் இருந்து நேர் எதிரே அமைந்துள்ளது நாழிக்கிணறு. படிகள் வழியாகக் கீழே இறங்கி கிணற்றை அடையலாம். ஒரு சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இக் கிணற்றில், அள்ள அள்ள நீர் சுரப்பது, அது குடிப்பதற்குறிய நன்னீராக அமைந்திருக்கிறது. .சூரசம்ஹாரத்தின் போது, முருகப்பெருமான் தனது படைவீரர்களின் தாகம் தணிக்க தனது வேலால் குத்தி உருவாக்கினார். இது தீர்த்தமாகும்‘கந்தபுஷ்கரணி’ .
வெளிப் பிராகாரம் (சீபலி மண்டபம்)
சண்முக விலாசத்திலிருந்து உள்ளே பக்தர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி வெளிப்பிராகாரத்தை அடையலாம். தேவர்களுக்கு முருகப்பெருமான் பலி கொடுக்க எழுந்தருளும் இடம் என்பதால் இதனை சீபலி மண்டபம் என்கிறார்கள். மண்டபத் தூண்களை சிற்ப யானைகள் தாங்குவதால், இது ‘ஐராவத மண்டபம்’ என்றும் அழைக்கப்படுகிறது
கருவறை
5 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பவளப்பாறை மற்றும் மணற் படிவுப் பாறையில் முற்காலப் பாண்டிய மன்னர்களின் குடைவரைச்சிற்பத்திற்குச் சான்று கூறும் குகைக் குடைவரை உள்ளது.
சுப்பிரமணியர்
கருவறைத் தெய்வமாக சுப்பிரமணியர் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் உள்ளார்.ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட அவரது மேற்கையில் தாயான சக்தி வேல் உள்ளது.கீழ்க் கை அடியவர்களுக்கு வரமளிக்கிறது. இடது மேலே உள்ள கை செபமாலையுடன்,கீழே உள்ள கை தொடையைப் பற்றியவாறு உள்ளது. சூரபத்மனை அழித்த பின்பு அத் தீவினை அகல தம்முடைய தந்தையை வழிபடும் எழிலானத் தோற்றத்துடன் உள்ளார். தம்மைக் காண வந்த தேவர்களை தம்முடைய தலையை லேசாகத் திருப்பி ஓரக்கண்ணால் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது வேறெங்கும் காணயியலாத அற்புதமாகும். பிரமனின் செபமாலையைக் கொண்டுள்ளதால் பிரமனின் படைப்புத்தொழிலையும் செய்பவராகிறார். பாலசுப்பிரமணியருக்கு வலப்புறம் தந்தையான சிவனுக்கு எதிரே 5 லிங்கங்கள் உள்ளன.பின்புறம் செகநாதர் எனப்படும் சந்திர லிங்கமும்
இடது புறம் செகநாதர் எனப்படும் சூரிய லிங்கமும் உள்ளது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற தமிழரின் உயர்ந்த பண்பாட்டினைக் காட்டுவதாக உள்ளது.
கருவறையின் முன்பாக அர்த்த மண்டபம் .அதன் வாசலில்காவலர்களாக முருகனின் தளபதிகளும் பார்வதியின் காற்சிலம்பின் நவமணிகளுள் மாணிக்கவல்லியிடம் தோன்றிய வீரபாகுவும்,புட்பராகவல்லியிடம் தோன்றிய வீரமாமகேந்திரரும் உள்ளனர். .
சண்முகர்
கருவறையின் முன்பாக இடது புறம் சண்முகர் சந்நிதி உள்ளது.இவர் ஆறு முகமும் பன்னிரு கரமுடன் உள்ளார். சண்முகம் என்றால் ஆறுமுகம் என்று பொருள் படும். இவரே சூரசம்ஹாரத்தின் போதும், ஆவணி, மாசி திருவிழாக்களின் போதும் தங்கத்தேரில் எழுந்தருளுகிறார்
தென்திசை நோக்கி நின்ற நிலையில் உள்ளார்.அவருடன் இடப்புறம் வள்ளி நாயகியும்,இடப்புறம் தெய்வானை நாயகியும் உள்ளனர்.பன்னிரு தோள்களிலும் அமைந்துள்ளகரங்களில் வலது கைகளில் அபயம்,பாசம்,சக்கரம்,குறு வாள்,அம்பு,சக்திவேல்,இடதுகைகளில் வரதம், அங்குசம், சேவற்கொடி, கேடயம்,வில்,வஜ்ரம் ஆகியன உள்ளன. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஆறுமுகனின் எழிலான திருக்கோலத்தைக் கூறுகின்ற போது, வானவருக்கு அருளுதல்,கழுத்தில் தொங்குகின்ற மாலையைப் பிடித்தல்,மார்போடு பொருந்துதல்,தொடை மேல் அமையப்பெற்ற மணியை ஒலித்தல்,தேவிக்கு மாலையைச் சூட்டுதல், துடியைப் பற்றுதல் ஆகிய செயல்களைச் செய்வதாகக் கூறுகின்றார். தற்போதுள்ள ஆறுமுகனின் வடிவம் வேறுபட்டுள்ளது ஆய்வுக்குறியது. வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் சண்முகர் வட்ட வடிவ அலங்காரத் தூண்கள் கொண்ட மூன்றடி உயர மேடையில் உற்சவ மூர்த்தியாக உள்ளார்.
அர்த்தமண்டபம்
கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் [இடை நாழி] உள்ளது.
கருவறை வெள்ளைப் படிவுப்பாறை மற்றும் பவளப்பாறைகளால் அமைந்தது. அதைத்தொடர்ந்து அர்த்த மண்டபம் கருங்கல்லால்அமையப் பெற்றது.மேலும் பாறையைச் சுற்றிலும் மூடியவாறு கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.
அர்த்தமண்டபம் [இடை நாழி]யில் நின்று திரிசுதந்திரர்கள்முருகனுக்கு அர்ச்சனை மற்றும் பாடல்களைப் பாடித் தொண்டு செய்கின்றனர். அர்த்த மண்டபத்தின் இரு புறமும் முருகனின் படைத்தளபதிகளான வீரபாகுவும், வீரமகேந்திரரும் உள்ளனர். அர்த்தமண்டபம் நுழைவு வாசல் நிலையில் விநாயகரின் சிற்பம் உள்ளது.
பஞ்சலிங்க தரிசனம்
அர்த்த மண்டபத்தின் வலதுபுறம் சிறிய நுழைவாயில் அதன் வழியாக உள்ளே சென்றால் ஐந்து சிவலிங்கங்களைத் தரிசிக்கலாம். காற்று, நெருப்பு, ஆகாயம், நீர், நிலம் ஆகியவற்றை இவை உணர்த்துகின்றன இச்சிவலிங்கங்கள் முருகப்பெருமான் வழிபட்டவைகளாகும்.
மகா மண்டபம்
அர்த்தமண்டபம் [இடை நாழி]யை அடுத்துள்ள மகாமண்டபம் பக்தர்கள் நின்று வழிபடுவதற்குரிய இடமாகும். எழிலானச் சிற்பங்களுடன் அமைந்துள்ள இம் மகா மண்டபம் கருவறை மூலவரான கிழக்கே பாலசுப்பிரமணியருக்கும் உற்சவ மூர்த்தியான தெற்கேப்பார்த்த வள்ளி தெய்வானை சமேதரான சண்முகருக்கும் பொதுவானதாகஅமைந்துள்ளது. திருச்செந்தூர் முருகப்பெருமான், தவக் கோலத்தில் இருப்பதால் மூலவருக்கு காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.
மகாமண்டபத்தில் வீரபாகுவிற்கு வலது புறம் உள்ள மேடையில் அருள்மிகு கரியமாணிக்க வினாயகரும், அருள்மிகு பார்வதி அம்மனும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிறிய துளை அமைப்பு உள்ளது.அவ் வழியேப் பார்த்தால் பஞ்ச லிங்கங்கள் தெரிகின்றன. மகாமண்டபத் தூண்கள் சிற்ப சாஸ்திரப்படி அமையப் பெற்றது.நாகபந்தம்,சதுரம், இடைக்கட்டு,குடம், கமலம்,பலகை மற்றும் போதிகையும் உள்ளது.போதிகையின் அமைப்பைக் கொண்டு பார்த்தால் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இம்மண்டபத்தின் வட மேற்கு மூலையில் பஞ்சலிங்கத்தை வழிபடச்செல்வதற்கான குடைவரை வழி உள்ளது.
தொடர்ந்து செந்தில் நாயகர் சன்னிதி உள்ளது.அதனுள்ளே கருவூலஅறை உள்ளது. இவ்வறைக்கு இடப்புறம் ஆறுமுக நயினார்[சண்முகர்] கருவறை, அர்த்த மண்டபம் உள்ளது. இவரைச் சுற்றி வருவதற்க்கு சிறிய பாதையும் உண்டு. இச்சன்னிதிக்கு இடப்புறம் உள்ள அறையில் அலைவாயுகந்தப் பெருமான்,அஸ்திரத்தேவர், நடராசர்,வினாயகர்,சேரமான் பெருமான் நாயனார், அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் ஐம்பொன் படிமங்கள் உள்ளன.இவர்களை வழிபட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியேறினால் தங்கக் கொடிமரத்தைக் காணலாம்.இப்பொழுது முதல் திருச்சுற்றிற்கு வந்துள்ளோம்.
முதல் திருச்சுற்று
தங்கக் கொடிமரத்தைக் கும்பிட்டு விட்டு வலமாகச் சென்றால் தென் கிழக்கு மூலையில் மடைப்பள்ளி உள்ளது.அதற்கு முன்பாக இடது புறம் உள்ள திண்ணையில் சிறிய யாககுண்டம் உள்ளது.தினசரி கோயில் நடை திறந்து வழிபாடு தொடங்கும் போது இந்த யாககுண்டத்திலிருந்து விநாயகருக்குப் பூஜை செய்து அதிலிருந்து நெருப்பினை எடுத்துச் சென்று தீபம் ஏற்றுவது வழக்கம்.
தொடர்ச்சியாக இரண்டாம் திருச் சுற்றிலிருந்து முதல் திருச்சுற்றிற்கு வரும் ஆறு படிக்கட்டுகளும், அதனுடைய மேற்புறம் வள்ளி,தெய்வானை சமேதராக குமாரவிடங்கப்பெருமானின் சன்னிதியும்உள்ளது.வில்லேந்திய முருகனின் அரியத் தோற்றம்.வலக்கைகளில் முன்கை அம்பினைப் பற்றிக் கொண்டும் ,பின் கை சக்தி வேலினைப் பற்றிக் கொண்டும் உள்ளது. இடக்கைகளில் முன் கை வில்லினைத்தாங்கிப் பிடித்தவாறும்,பின்கை வச்சிராயுதத்தைப் பிடித்தவாறும் உள்ளது கலியுகக் கந்தப் பெருமானின் அருள்திறத்தைக் காட்டுவதாக உள்ளது.
குமாரவிடங்கப் பெருமான் வள்ளி,தெய்வானை சமேதராக திருக்கல்யாணங்களுக்கு எழுந்தருளும் பெருமை பெற்றுள்ளதால் ‘மாப்பிள்ளைச் சாமி’ என்று பக்தர்களால் பாசமுடன் அழைக்கப்படுகிறார்.
கருவறையின் மூன்று வெளிப் [சுவர்களிலும்] பக்கங்களிலும் தேவக்கோட்டங்கள் உள்ளன.தெற்கேயுள்ள தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியின் அருள் பொழியும் சிற்பம் உள்ளது. சிவபெருமான் ஆசிரியராகக் காட்சி தரும் படிமம் இது. இவரது வலது கால் பீடத்திலிருந்து தொங்கிக்கொண்டு, கீழே விழுந்து கிடக்கும் முயலகனை மிதித்தவாறு உள்ளார். இடது காலை மடித்து வைத்து உள்ளார்.ஞானத்தின் வடிவமான கல்லால மரத்தின் கீழ் சின்முத்திரையுடன் புன் முறுவலுடன் உள்ளார். கூர்ந்து நோக்கிப் பார்த்தால் புன்னகையைக் காணலாம்.
தட்சிணாமூர்த்தியின் முன்புறம் திண்ணையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் எழில் மிகுச் சிற்பங்கள் தனித் தனியே வரிசையாக வட திசை நோக்கி கை கூப்பியவாறு உள்ளனர்.இவர்களுக்கு அருள் தந்தவாறு கிழக்கு திசையைப் பார்த்தவாறு பார்வதி அம்மன்,வினாயகர்,சிவலிங்கம் உள்ளனர்.தொடர்ந்து கிழக்கு திசையை நோக்கியவாறு
வள்ளி அம்மன் கோயில் உள்ளது.கருவறை,அர்த்த மண்டபத்துடன் வடக்கு நோக்கி ஏறி இறங்கும் படிக்கட்டுடன் அமையப் பெற்ற இச்சன்னிதியில் தாமரைப் பூவை இடக்கையில் பிடித்தவாறு வலக்கையை எழிலாகத் தொங்க விட்டவாறு கருணையே வடிவாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.அர்த்த மண்டபத்துடன் வட பகுதியில் சுவாமியின் பள்ளியறை உள்ளது.சுவாமியின் திருப் பள்ளியெழுச்சியைக் காண்பதற்கேதுவாக அர்த்த மண்டபத்தின் தெற்குப் பகுதியில் வாசலொன்று அமைக்கப்பட்டுள்ளது. இச் சன்னிதியில் சாம்பிராணிப் புகை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.குங்குமப் பிரசாதம் வழங்கப் படுகிறது.
வள்ளி அம்மன் கோயில் கருவறை ,அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் அதிட்டானம், பிரஸ்தரம், ஆகியன அதி நுட்பமானகலை நயத்துடன் உள்ளன்.அபிசேக நீர் வெளியேற பிரணாளஅமைப்பு உள்ளது.
வள்ளி அம்மனை வழிபட்டு பிரதட்சணமாக [வலதுபுறமாக]வரும் போது பின்புறம் நாகப்பன், சிவபெருமான், வினாயகர், அம்பாள், காசிவிசுவனாதர், விசாலாட்சி, சங்கரநாராயணர்,நந்தீஸ்வரர்,வேதபுரீஸ்வரர், வாதபுரீஸ்வரர், நாகனாதேஸ்வரர் ஆகியோர் தனித்தனிப் பீடங்களில் அமர்ந்துள்ளனர் இடதுபுறம் யாகசாலை உள்ளது.யாகசாலையின் முன்னால் கோட்ட தேவதையாக மூலவரான பாலசுப்பிரமணியசாமி இரண்டடி உயரத்தில் மெய் சிலிர்க்கவைக்கிறார். மூலவரை அருகில் நின்று பார்க்க முடியாத மனக்குறையை இவர் போக்குகிறார்.
யாகசாலைக்கு இடதுபுறம் தெய்வானை அம்மன் கோயில் உள்ளது.மூன்றரை அடி உயரத்தில் வலக்கையில் குமுத மலரைப் பிடித்தவாறு இடக்கையை எழிலாகத் தொங்க விட்டவாறு ’யாமிருக்கிறோம் பயம் வேண்டாம்’என்றவாறுதேவர்களின் தலைவனான தேவேந்திரனின் தவப்புதல்வி தெய்வானை அம்மன் காட்சி தருகிறார். கருவறை, அர்த்தமண்டபம் கலை நயத்துடன் அமைக்கப் பெற்றுள்ளது
அர்த்தமண்டபத்தின் வெளிச்சுவற்றில் தென் புறம் சூரசம்காரக் காட்சியும், வடபுறம் வள்ளி தினைப்புனத்தைக் காவல் புரியும் காட்சியும் கந்தபுராணத்தை நினைவூட்டுகிறது. தெய்வானை அம்மன் கோயிலுக்கு முன்புறம் மூலவரின் கருவறையின் வடபுற தேவக்கோட்டத்தில் மயிலருகே நிற்கும் மயூரநாதரின் படிமம் காணப்படுகிறது.
இவரை வழிபட்டுச்சென்றால் சண்டிகேசுவரரின் கோயில் வரவேற்கும். சிவன் கோயிலில் அமையப் பெறுமிவர் முருகன் கோயிலில்அமர்ந்துள்ளது ’சிவனும் முருகனும் ஒன்றே’ என்ற அரிய தத்துவத்தை உணர்த்துவதற்கேயாம். தொடர்ந்து திருக்கோயிலின் ஐம்பொன் படிமக் கண்காட்சிக் கூடம் உள்ளது. இங்கு பிற்கால கட்டபொம்மன் வழிபட்ட சிலைகள்,முற்கால பாண்டியர்கள், சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சிலைகளும் காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன.
அதற்கு இடதுபுறம் நடராசப் பெருமானின் கோயிலாகும்.இச்சிலையானது உலாந்தகர்களால் கொள்ளையடிக்கப்பட்டு செந்திலாண்டவனின் அருளால் மீட்கப்பட்ட அருட் பெருமை வாய்ந்ததாகும்.
இவரை வழிபட்டுச் சென்றால் சனீஸ்வரர் தனது காக்கை வாகனம் முன் எழிலாக நிற்கிறார்.இவருக்குப் பரிகாரம் செய்தால் தீவினை அகலும். இச்சன்னிதிக்கு இடப்புறம் பைரவருடைய கோயில் உள்ளது.சேத்திரபாலர் என்றழைக்கப்படும், இவர் நாய் வாகனத்துடன் நின்ற தோற்றத்துடன் உக்கிரமாக உள்ளார். தினமும் இரவு கோயிலின் திறவுகோல் இவரிடம் ஒப்படைக்கப்பட்டு,மறுநாள் அதிகாலையில் அங்குச முத்திரையால் திறவுகோலைப் பெறுவர்.தினமும் மடைப் பள்ளியின் அடுப்பைப் பற்ற வைத்திட பைரவர் கோயில் தீபத்திலிருந்து தீபம் ஏற்றி அத்தீயைப் பயன்படுத்துகின்றனர்.
முதல் சுற்றில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் சுவர்களுக்கருகே பரிவார தெய்வங்களுக்கான பலி பீடங்கள் உள்ளன.
இரண்டாம் திருச்சுற்று
இரண்டாம் திருச்சுற்றுக்குச் செல்வதற்காக முதலாம் திருச்சுற்றின் தங்கக் கொடிமரம் வழியாக மேற்கே வெளியேறினால் செப்புக்கொடிமரம் வருகிறது. இக்கொடி மரத்தை வலமாகச் சுற்றி இரண்டாம் திருச்சுற்றுப் பாதையில்தெற்கேச் சென்று பின்பு மேற்கே வர வேண்டும்.
ஆறுமுகப் பெருமானின் தோற்றத்தைக் கண்டுவணங்கி நிமிர்ந்தால் யானை மண்டபம் என்றழைக்கப்படும் அயிராவத மண்டபத்தில் நிற்கலாம். எழில்மிகு அணிவொட்டித் தூண்கள், நடராசரின் சிற்பம், ஆறுமுகமும் பன்னீரண்டு கைகளுடன் முருகனின் தோற்றம்,காளை மீதமர்ந்து திருமணக் காட்சி தரும் பார்வதி அம்மன் சமேத சிவபெருமான், முருகனின் காவலர்களின் மிடுக்கான சிற்பங்கள் ஆகியன காண்போரை வியக்க வைக்கின்றன.வாசலில் சேத்திரப்பாலகர்கள் எட்டு அடி உயரத்தில் உள்ளனர்.உள்ளே சென்று கலியுகக் கடவுளான கந்தனை வழிபடுங்கள், வேண்டுபவற்றைத் தருவான். பயபக்தியுடன் செல்லுங்கள் என்று எச்சரிக்கைச் செய்வது போல உள்ளனர்.
தொடர்ந்து, மேற்கேச் சென்றால் வலப்புறச்சுவற்றில் சிறிய தட்சிணா மூர்த்தி உள்ளார்.அடுத்து அலங்கார மண்டபம் கன்னி மூலையில் வினாயகர், 108 சிவலிங்கம்,சூரசம்கார மூர்த்தியின் சம்காரக் காட்சி காணப்படுகிறது. முருகப்பெருமான் அன்னை பார்வதி அள்ளித்த சக்தி வேலால் சூரனை அழித்துஅவனது உடலை இரண்டாகப் பிளப்பது போலவும் அதிலிருந்து மயிலும் சேவலும் தோன்றுவது போலவும் புடைச்சிற்பம் அமைந்துள்ளது.
தொடர்ந்து ஆன்மலிங்கம், அருணகிரிநாதரின் செப்புப் படிமம்உள்ளது. இதனைத்தொடர்ந்து மேலக்கோபுர வாசலிலிருந்து கீழிறங்கும் 27 படிக்கட்டுகள் உள்ளன.இவைகள் நமக்கு விண்ணில் உள்ள 27 நட்சத்திரங்களைக் காட்டுகிறது.இப் படிக்கட்டுகளுக்கு எதிரே மேலக் கோபுர வாசல் வினாயகர் சன்னிதி உள்ளது. பத்து அடி உயரத்தில் கம்பீரத் தோற்றத்தில் இவர் காட்சி அளிக்கிறார். இவருடைய இடது தொடையில் லட்சுமி அம்மனை அமர வைத்து அபயக்கரம் காட்டி தைரியத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்.
இவரை வழிபட்டுவிட்டு வலமாகச் சென்று இடதுபுறம் பார்த்தால் பள்ளி கொண்டப் பெருமாளின் கோயில் உள்ளது.நிமிர்ந்துப் பார்த்தால் பல லட்சம் ஆண்டு பழமை வாய்ந்த சந்தனாமலையின் ஒரு பகுதியைக் காணலாம்.
துளசியின் மணம் வீசும் உட்புறம் சென்றால்அரங்கநாதப்பெருமாள் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார்.இடக்கை இடுப்பில் வைத்துள்ளர். வலக்கையில் கீழ்க்கை வரத முத்திரையுடனும், உள்ளங்கை சக்கரப் படையையும் கொண்டுள்ளது. மருமகனான முருகப் பெருமானுக்கு படைக்கலம் தந்தருளும் காட்சியாகும். பாறைப் பகுதியில் ஸ்ரீ கஜலட்சுமியின் மூன்றடி சிற்பமும், ஆதிசேசனின் மீது ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளின் கிடந்தக்கோலத்தின் பத்து அடி சிற்பமும் முற்காலப் பாண்டிய மன்னர்களின் குடைவரைச் சிற்பக் கலைக்குச் சான்றாக உள்ளது. பல்லவ மன்னர்களுக்கு முன்பாகவே பாண்டிய மன்னர்கள் பாறைகளைக்குடைந்து கோயில் கட்டும் கட்டிடநுட்பங்களைத் தெரிந்திருந்தார்கள் என்பது அறியமுடிகிறது.
ஸ்ரீ செந்தில்கோவிந்தர் மேற்கேத் தலை வைத்து தெற்குநோக்கிப் படுத்துள்ளார். ஸ்ரீ பூதேவி [மண்மகள்] பாதத்தருகேயும்,ஸ்ரீ நீளா தேவி [ஆயர் மகள்] ஸ்ரீ பூ தேவி அருகிலும்,ஸ்ரீ தேவி [ஸ்ரீ லட்சுமி] பெருமாளின் தலையருகேயும் அமர்ந்துள்ளனர்.கொப்பூள்க் கொடியிலிருந்து எழுந்த தாமரை மலரில் நான்முகக் கடவுளாகிய பிரமன் அமர்ந்துள்ளார். வானத்தில் தேவர்கள் இருப்பது போன்ற புடைச் சிற்பங்கள் உள்ளன. கஜலட்சுமியின் திரு உருவம் செந்தாமரையில் அமர்ந்துள்ள எழில்மிகுத் தோற்றம் இனியதாகும்.இருபுறமும் யானைகளிரண்டு குடத்து நீரால் அம்மனுக்கு அபிசேகம் செய்யும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். செந்தில் கோவிந்தர் சன்னிதிக்கு எதிரே கருடாழ்வார் பெருமாளைக் கும்பிட்டவாறு குத்துக் காலிட்டவாறு உள்ளார்.
இவரையும் கண்டு பின்பு கிழக்கு நோக்கி வரவேண்டும் தொடர்ந்து தெற்கேத் திரும்பினால் செப்புக் கொடிமரத்தைக் காணலாம்.இக் கொடி மரத்தின் வழியே மூலவரான பால சுப்பிரமணியரைக் காணலாம்.இக் கொடிமரத்திற்கு கீழ்புறம் சுவற்றில் சிறிய துளை ஒன்று உள்ளது.இதில் காதை வைத்துக் கேட்டால் ஒம் என்ற சப்தம்கேட்கும்.கடலலைகள் என்னேரமும் முருகப் பெருமானை ஒம் என்னும் மந்திரச் சொற்களால் அர்ச்சனை செய்கின்றன.கொடி மரத்தின் முன் புறம் கம்பத்தடி வினாயகரின் சிறிய சன்னிதி உள்ளது. இவ்வாறு இரண்டாம் திருச்சுற்றை சண்முகரின் சன்னிதி வரை சென்று நிறைவு செய்யலாம். இரண்டாம் திருச்சுற்றின் தென் கிழக்கு மூலையில் பக்தர்கள் வெளியேறுவதற்கான வழியொன்று உள்ளது .
கந்தர் சஷ்டி
கந்தர் சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறுநாட்களுக்கு முருகப் பெருமானைக் நோக்கி செய்யப்படும் விரதமாகும்..
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி தினத்தில்தான் முருகப் பெருமான், தன் அவதாரத்துக்குக் காரணமான சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.
அனைத்து சிவன் கோயில்களிலும் ஆலயங்களிலும் இந்த ஆறு தினங்களும் முருகனுக்கு கந்தர் சஷ்டி திருவிழா கொண்டாடப்பெறும். ஆறுபடை வீடுகளிலும் ,உலகமெங்கும் இத்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் அவர்களின்குழந்தை பேறு கிடைக்கும். சிறப்புமிக்க சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் தீபாவளி கழிந்த பிரதமை நாளில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம் ஆறு நாள்கள் கடைப்பிடிக்கப்பட்டு சஷ்டி நாளில் முடியும்.
சூரனை முருகப்பெருமான் வதைத்த நாளோடு இந்த விரதம் முடிகிறது. ஐப்பசி மாத சஷ்டியில் தொடங்கி ஒரு முழு ஆண்டில் வரும் 24 சஷ்டியிலும் விரதமிருப்பது நல்லது. முடியாதவர்கள் இந்த ஐப்பசி சஷ்டி விரதம் இருக்கலாம். ஆனால் ஆறு நாள்களுமே விரதம் இருப்பதுதான் முக்கியமானது. காலையில் எழுந்து தூய்மையாகி, திருநீறிட்டு, வடக்கிலோ, தெற்கிலோ அமர்ந்து முருகப்பெருமானை தியானிக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் முருகனை வழிபட வேண்டும். சஷ்டி விரத ஆறு நாள்களிலும் உண்ணாமல் இருப்பதுதான் நல்லது
விரத நாளில் ஒரேயொரு முறை மட்டும் ஆறு மிளகும், ஆறு கை அளவும் நீரும் எடுத்துக்கொள்ளலாம். மிளகு வயிற்றில் அமிலக்கோளாறு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் அதை எடுத்துக் கொள்ளலாம் 6 நாளும் விரதமிருந்து ஏழாவது நாளில் சிறப்பான பூஜைகளை மேற்கொண்டு அடியார்களுக்கு உணவிட்டு ‘மகேஸ்வர பூஜை’ மேற்கொள்ள வேண்டும். ஆறு நாள்களும் உண்ணாமல், உறங்காமல் விரதமிருந்து ஏழாவது நாளில் கடலில் நீராடி விட்டு விரதத்தை நிறைவேற்றுவர்.
திருச்செந்தூரில் மாத பூஜையும் -பலன்களும்
தை
தை மாதம் அகில் தூபமிட்டு வழிபட்டால் சிவ தரிசனம் காணலாம் .அனைத்து சங்கராந்திகளிலும் முகாரம்ப தீர்த்தத்திலும் ,கந்த புஷ்கரணி தீர்த்தத்திலும் நீராடி விட்டு சிறு பயறு கலந்த செந்நெல் அரிசிச் சோற்றை முருகனுக்குப் படைத்து வழிபட்டால் நூறு யாகம் செய்த பயனடையலாம்.
மாசி
மாசி மாதம் வதனாரம்பத்தீர்த்தத்தில் நீராடி செந்திலாண்டவரை வழிபட்டால் இப்பிறவி கடைசியாகும்.
பங்குனி
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அமரபட்சத்து நவமி திதிகளில் கடலில் நீராடி கந்தனை வழிபட்டால் எல்லா பாவங்களும் அகலும்.
சித்திரை
சித்திரை மாதம் முகாரம்பத் தீர்த்தத்தில் குளித்து பூரணச் சந்திரன் காலத்திலும், உத்திர, தட்சிணாயக் காலங்களிலும் வேலவனைத் தொழுது நின்றால் முருகனருளை உடனே பெறலாம்.
வைகாசி
வைகாசி மாதம் சுக்கிலபட்சம் மூன்றாம் திதியிலும் விசாக நட்சத்திரத்தின் போதும் வள்ளிமணாளனை திருச்செந்தூரில் வழிபட்டால் துக்கங்கள் அகலும்,நோயற்ற வாழ்வு பெறலாம்.
ஆனி
ஆனி மாதத்தில் பூரணச் சந்திரன் காலத்திலும் கிருத்திகை நாளிலும் வழிபட்டால் தொலையாத பாவங்கள் தொலைந்து போகும்.
ஆடி
எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் பசுந்தயிர் கலந்த சோற்றை ஜெயந்தினாதருக்குப் படைத்து வழிபட்டால்முருகனுடைய பாதங்களை அடையலாம்.
ஆவணி
ஆவணி மாதம் ஒவ்வொரு நாளும் வழிபடுவோர் நூறு யாகம் செய்த நற்பயனைப் பெறுவர்.
புரட்டாசி
புரட்டாசி மாதம் திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்க்குத் திதி கொடுத்தால் முன்னோர்கள் தேவருலகை அடைவார்கள்.
ஐப்பசி
இம்மாதம் உத்திர தட்சிணாயக் காலங்களில் கந்தபுஷ்கரணியில் நீராடி வழிபட்டால் மறு பிறவி கிடையாது.
கார்த்திகை
கார்த்திகை மாதம் முப்பது நாளும் பசு நெய்யில்தீபமிட்டால் முருகனின் பாதத்தை அடைவர். கார்த்திகை நட்சத்திரத்தன்று நெல்லி இலையால் முருகனை அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம்.
மார்கழி
மார்கழி மாதம் அமர பட்சத்து சப்தமி, நவமி திதிகளில்அர்ச்சனை செய்து வழிபட்டால் முருகனின் மாமாவான மாயவனின் அருளைப் பெறலாம்.
திருச்செந்தூர் செந்திலாண்டவனின் கோயிலைச் சுற்றியுள்ள தீர்த்தங்கள்
1.வதனாரம்பத் தீர்த்தம் 2.தெய்வானைத் தீர்த்தம் 3.திருமகள் தீர்த்தம் 4.திக்குப்பாலகர் தீர்த்தம்
5.பழைய காயத்திரி தீர்த்தம் 6.சாவித்திரி தீர்த்தம் 7.கலைமகள் தீர்த்தம் 8.வெள்ளை யானை தீர்த்தம்
9.வைரவர் தீர்த்தம் 10.வள்ளியம்மை தீர்த்தம் 11.துர்க்கை தீர்த்தம் 12.ஞானத் தீர்த்தம் 13.சத்தியத் தீர்த்தம்
14.தருமத் தீர்த்தம் 15.தவசிகள் தீர்த்தம் 16.தேவர்கள் தீர்த்தம் 17.பாவனாச தீர்த்தம் 18.கந்தபுஷ்கரணி தீர்த்தம் 19.சேது தீர்த்தம் 20.தசகங்கா தீர்த்தம் 21.கந்தமாதன தீர்த்தம் 22.மாதுரு தீர்த்தம் 23.பிதிரர்கள் தீர்த்தம் 24.சித்தர்கள் தீர்த்தம்
தற்காலத்தில் கந்தபுஷ்கரணி தீர்த்தம் நாழிக் கிணறு என்ற பெயரிலும், ஏனைய தீர்த்தங்களனைத்தும் கடலினுள்ளும் உள்ளன.எனவே கடலினுள் ஒரு முறை நீராடினால் இருபத்து மூன்று தீர்த்தங்களிலும் நீராடியதற்க்குச் சமம். ஒவ்வொரு தீர்த்தங்களையும் காட்டுவதற்க்கு கடற்கரைப் பகுதியில் கல்வெட்டுக்கள் நிறுவப்பட்டிருந்தன.
பராமரிப்பின்றி அவைகள் மணலினுள் புதையுண்டு போயின.
தினமும் நடைபெறும் பூஜைகள் விபரம்
05.00 காலை கோயில் நடை திறத்தல்
05.10 காலை சுப்பிரபாதம் [திருப்பள்ளி எழுச்சி]
05.30 காலை விசுவ ரூப தரிசனம்
05.45 காலை கொடிமர வணக்கம்
06.15 காலை உதய மார்த்தாண்ட அபிசேகம்
07.00 காலை உதய மார்த்தாண்ட தீபாராதனை
08.00 காலை கால சாந்தி தீபாராதனை
10.00 காலை கலச பூஜை
10.30 காலை உச்சி கால அபிசேகம்தீபாராதனை
12.00 பகல் உச்சி கால தீபாராதனை
05.00 மாலை முதல்
05.30 மாலை வரை சாயரட்சை தீபாராதனை
07.15 இரவு அர்த்த சாம அபிசேகம்
07.45 இரவு ராக்கால தீபாராதனை
08.00 இரவு ஏகாந்தம் போற்றி அர்ச்சனை
08.15 இரவு அர்த்த ஜாம பூஜை
08.30 இரவு ஏகாந்தம் சேவை
08.45 இரவு பள்ளியறை தீபாராதனை
09.00 இரவு நடை திருக்காப்பிடுதல்
வருடாந்திர சிறப்புப் பூஜை விபரம்
1. சித்திரை வருடப்பிறப்பு 05.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.15
2. மாதாந்திர வெள்ளி தோறும் 4.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00
3. வைகாசி விசாகம் வருடப்பிறப்பு 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.00
4. வைகாசி விசாகம் மறுநாள் 04.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00
5. ஆவணித் திருவிழா 1 ஆம்திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
6. ஆவணித் திருவிழா 2 ஆம்திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
7. ஆவணித் திருவிழா 7 ஆம்திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
8. ஐப்பசி விசு 05.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00
9. தீபாவளித் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
10.கந்தசஷ்டி 1 ஆம் திருநாள் 02.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
11.கந்தசஷ்டி 2 ஆம் திருநாள்3.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
12.கந்தசஷ்டி 3 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
13.கந்தசஷ்டி 4 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
14.கந்தசஷ்டி 5 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
15.கந்தசஷ்டி 6 ஆம் திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம்02.00
16.கந்தசஷ்டி திருக்கல்யாணம் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
17.கார்த்திகை மாதப்பிறப்பு 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.15
18.மார்கழி 1 ஆம் தேதி முதல்-30 வரை 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 19.தை 1 ஆம் தேதி 03.00 மார்த்தாண்ட அபிசேகம்04.00 20.ஜனவரி 1 ஆம் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
21.தைப் பொங்கல் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
22.காணும் பொங்கல் 04.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.15
23.தைப் பூசம் 02.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 3.15
24.தைப்பூசம் முன்தினம் 04.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.00
25.மாசித்திருவிழா 1 ஆம் திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
26.மாசித்திருவிழா 2 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
27.மாசித்திருவிழா 7 ஆம் திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
28.பங்குனி உத்திரம் 04.00
திருச்செந்தூர் கோயிலில் நிகழ்த்தப்பெறும் வழிபாடு – சிறு குறிப்பு
திருச்செந்தூர் கோயிலில் வழிபாடு, குமார தந்திர முறைப்படி ஒன்பது காலப் பூஜையுடன் தினமும் நிகழ்த்தப் பெறுகின்றன. காலை 05.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும். இரவு 09.00 மணிக்கு நடை திருக்காப்பு. திருச்செந்தூர் கோயிலில் ஆண்டு சிறப்பு வழிபாடு காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் நடை திறக்கப்படும்.
சங்காலப் புலவர்கள்
கபாடபுரம் பற்றி வால்மீகி தான் இயற்றிய இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில் இலங்கை நோக்கிச் செல்ல இருந்த அனுமனுக்கு சில அறிவுரைகளைக் கூறும் போது,
‘தமிழ் நாட்டில் தென்பாண்டி நாடான மதுரையைக் கடந்து நீ செல்லும் போது முதலில் ஒரு ஊர் வரும்.அங்கு நீ இறங்கி விடாதே.இறங்கி விட்டால் அந்த ஊரை விட்டு நீ இலங்கைசெல்ல உன் மனம் விரும்பாது.ஏனெனில் அங்குள்ள நாகரீகமும்; பண்பாடும் உன்னை இழுக்கும் எனவே அங்கு நிற்காமல் தொடர்ந்து போ அதற்கு அடுத்தாற்போல இலங்கை வரும்’ இராமாயணக் காலத்தில் கபாடபுரம் இருந்தது என்பதும் உறுதியாகிறது.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் பொருள் 114 ஆம் சூத்திரம் நச்சினார்க்கினியர் உரையுள் ‘பையுள் மாலை’ என்று தொடங்கும் பாடலில், “நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்” என்று கூறப்படுகின்றது.
புறநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார் ’’ வெண்தலைப் புணரி அலைக்குங் செந்தில் நெடுவேல் நிலைஇய வியந்துறை ‘’ [ பாடல் 55 ] எனப் பாடுகிறார். திருச்செந்தூருக்கு வருவோர் முதலில் தொலைவிலிருந்து காண்பது கடல் நுரைகளையே வெண்மையான தலைகளோடு கூடிய அலைக்கள் சீரிப்பாய்ந்து செந்தூர் வந்து முருகன் காலடியில் ஆணவம் ஒழிந்த சூரன் போல் அடைக்கலமாகி மறைகின்றன.
அகநானூறு
கடைச்சங்க புலவர்களில் பரணர் அகநானூறு பாடலில் ’’திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிசெருமிகுசேய் ’’ [ பாடல் 266 ] சிறப்பைக் குறிப்பிட்டுள்ளார், வயலில் உழவர்கள் உழும் போது எழும் ஓசையைக் கேட்ட தோகை மயில்கள் தெய்வம் குடியிருக்கும் மலையில் வந்து தங்கும் என கூறுகிறார்.
திருமுருகாற்றுப்படையில் ஆறுமுகனின் செயல்கள்
திருச்சீரலைவாய் முருகனின் ஆறுமுகத்தின் செயல்கள் கூறப்பெறுகின்றன. முருகனின் ஒரு முகம் இருண்ட பெரிய உலகம் குற்றமின்றி விளங்கும் பொருட்டுப் பல கதிர்களைத் தோற்றிவிக்கும் ; ஒரு முகம், அன்பர்கள் துதிக்க அதற்கு மகிழ்ந்து அவர்கள் வேண்டும் கருமங்களை முடித்துக்கொடுக்கும்; ஒரு முகம் மந்திரமுடைய வேத முறையில் ஒழுகும் அந்தணரது யாகங்களில் தீமை வராமல் காக்கும்; ஒரு முகம் வேதத்தின் மறை பொருள்களை ஆராய்ந்த இருடிகள் மகிழும்படி அவற்றை உணர்த்தித் நிற்கும் . ஒருமுகம் போர்க்கெழுந்த பகைவரைக் கொன்று கோபித்த உள்ளத்தோடு போர்க்களத்தை விரும்பும்;ஒருமுகம் குறவரின் மகளாகிய வள்ளியுடன் மகிழ்ச்சியைப் பொருந்தும்.
சிலப்பதிகாரம்
’’சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்’’ என்று சிறப்பிக்கும்.
இடைச்சங்கம் இருந்த கடல் கொண்ட கபாடபுரத்தின் ஒரு பகுதியே ஆகும் திருச்செந்தூர். முருகனிடம் தமிழ் கற்ற அகத்தியருக்கு இவ்வூரில் கோயிலுண்டு. நக்கீரர் ஆறுமுகப்பெருமானின் பன்னிருகைகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருமுருகாற்றுப்படையில் கூறியுள்ளார். எனவே இவ்வூர் பழமை வாய்ந்த ஊராகும்.
ஆதிசங்கரர்
கி.பி. எட்டாம் நூற்றாண்டு இக்காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஆதிசங்கரர் அவரது காசநோயை இங்கே வந்து முருகனை வழிபட்டு விபூதி பெற்று வில்வஇலை மூலம் காசநோயை போக்கினார். சுப்பிரமணியப் புஜங்கம் என்ற அப்பாடல்கள் மூலம் அக்காலத்தில் கோயில் கருவறை பாறையினுள் குடையப் பெற்ற குகையினுள் இருந்தது என்று கூறுகிறது.
‘செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும்
கந்தமாமலைக் குகை வந்தன காணவே
விழியெலாம் போற்றிடும் ஆறுமுகன் குகையிலே
கதிரவன் ஆயிரம் செவ்வொளி’ [சுப்பிரமணியப் புஜங்கம்]
அவரது சுப்பிரமணியபுஜங்கம் ஏழாவது செய்யுளில்,
’’பெருவேலை ஓரத்திலே பாவம் நீக்கும் பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில் ஒருஜோதி வடிவோடு குகைமேவு செந்தூர் உயிருக்கொருயிர் செம்பொன் அடிபற்றுவோமே’’
இப்பாடலில் திருச்செந்தூர் முருகன் கோயில் குகைக்கோயில் என்பதை கூறுகிறது.திருச்செந்தூர் முருகன் கோயில் மலையில் ஏறுவது கயிலை மலையில் ஏறிய பலனை அடைவார்கள்.
இதை அப்படியே ஏற்றுக்கொண்ட கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் அருணகிரி நாதர் ‘’கயிலை மலையனைய செந்தில் பெருவாழ்வே’’ என்று பாடியச் சிறப்பு உள்ளது . முருகன் மீது 83 திருப்புகழ் பாக்களை பாடியுள்ளார்.அவற்றைத் தொகுத்து தருமபுர ஆதீனம் கி.பி.1959 இல் வெளியிட்டுள்ளது.
கல்வெட்டுசான்று - 1
இரண்டாம் வரகுணமாற பாண்டியனின் நிரந்தரவைப்பு நிதி கல்வெட்டு
இடம் - அருள்மிகு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்.
காலம் - கி.பி.875
செய்தி - இரண்டாம் வரகுணமாற பாண்டியனின் நிரந்தரவைப்பு நிதி கல்வெட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பழமையான கற்பலகைக் கல்வெட்டு 210 வரிகளில் உள்ளது. தென்கிழக்கு மூலையில் வாசலுக்கு இடதுபுறம் நட்டுவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு, இக்கோயிலின் மூலவரை சுப்பிரமணிய படாகர் என்று குறிப்பிடுகிறது.
முருகப்பெருமானின் நாள் வழிபாட்டிற்கு 1400 பொற்காசுகளை வைப்புநிதியாக மக்கள் ஊர் மன்றத்தில் கொடுத்து ,அதில் கிடைத்த வட்டியைப் பயன்படுத்திய செய்தி காணப்படுகிறது,
மன்னர்கள் கோயிலின் வழிபாட்டிற்கு நன்செய், புன்செய் நிலங்களை வழங்கி வந்த காலத்தில் வயல்கள், தோட்டங்கள் விளைச்சலின்றி போனால் வழிபாட்டிற்கு தடைவந்து விடக்கூடாது என்று அச்சப்பட்டு பொற்காசுகளை இம்மன்னன் பொற்காசுகளை வழங்கியுள்ளார்.மார்கழி திருவாதிரை, மாசி மகம், வைகாசி விசாகம் நடத்திடவும்,
1400 பொற்காசுகளை குடநாட்டுப்பிரிவில் - கொற்கை, நல்லூர், சாலியத்தூர், புளியடி, கீரனூர்,
வழுதிவளநாட்டுப்பிரிவில் – வரகுணமங்கலம், இறைவழிமங்கலம், ஆலம்பாட்டம், மணிவீரப்பட்டினம்,.
ஸ்ரீவல்லபநாட்டுப்பிரிவில்- கட்டாறைமங்கலம், பறைசுமங்கலம்,
பராந்தகவளநாட்டுப்பிரிவில்- மாறமங்கலம், தென்றக்கீழூர்.
அமிர்தவளநாட்டுப்பிரிவில்- அவனிபசேகரமங்கலம் ஆகிய 16 ஊர்களின் மன்றங்களுக்கு கொடுத்து வட்டியாக 2799 கலம் 14 குறுணை நெல்லையும், வழிபாட்டிற்குத் தேவையான பூ, துணி, சந்தணம், வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சை, நெய், இளநீர், தேன், சூடன், மஞ்சள், காயம், பச்சபயறு, பச்சைக்கற்பூரம், ஆகியவற்றையும் வழங்கிடக் கூறியுள்ளார்.
சுவையானத் தகவல்கள் –
1] பொற்காசுகளை வட்டிக்குக் கொடுத்து வட்டியாக பொருட்களை பண்டமாற்று முறையில் பெற்றுள்ளனர். 2] வட்டி உரிய காலத்தில் கொடுக்கவில்லையென்றால் அபராதமாக இருமடங்காக செலுத்தக் கூறப்பட்டுள்ளது. 3] வைப்புநிதி மூலம் வட்டி பெறப்பட்டு அன்னதானம், வழிபாடு, திருப்பணி செய்வதற்கு இரண்டாம் வரகுண பாண்டியன் முன்னோடியாக இருந்துள்ளார். 4] அக்காலத்தில் ஒரு காசுக்கு 1000 வாழைப்பழம், 10 கலம் நெல், 7 துலாம் , 65 பலம் சர்க்கரை, 20 துலாம் காய்கறிகள், 60 நாழி காயம், 1220 பற்று வெற்றிலை, 10,000 பாக்கு 150 நாழி பூக்கள், 15 களஞ்சு கற்பூரம், ஒரு உரி புளி கிடைத்த செய்தியும் அறியலாகிறது.
கல்வெட்டுசான்று - 1
இரண்டாம் வரகுணமாற பாண்டியனின் நிரந்தரவைப்பு நிதி கல்வெட்டு
இடம் - திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்.
காலம் - கி.பி.875
செய்தி - இரண்டாம் வரகுணமாற பாண்டியனின் நிரந்தரவைப்பு நிதி கல்வெட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பழமையான கற்பலகைக் கல்வெட்டு 210 வரிகளில் உள்ளது. தென்கிழக்கு மூலையில் வாசலுக்கு இடதுபுறம் நட்டுவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு, இக்கோயிலின் மூலவரை சுப்பிரமணிய படாகர் என்று குறிப்பிடுகிறது.
முருகப்பெருமானின் நாள் வழிபாட்டிற்கு 1400 பொற்காசுகளை வைப்புநிதியாக மக்கள் ஊர் மன்றத்தில் கொடுத்து ,அதில் கிடைத்த வட்டியைப் பயன்படுத்திய செய்தி காணப்படுகிறது,
மன்னர்கள் கோயிலின் வழிபாட்டிற்கு நன்செய், புன்செய் நிலங்களை வழங்கி வந்த காலத்தில் வயல்கள், தோட்டங்கள் விளைச்சலின்றி போனால் வழிபாட்டிற்கு தடைவந்து விடக்கூடாது என்று அச்சப்பட்டு பொற்காசுகளை இம்மன்னன் பொற்காசுகளை வழங்கியுள்ளார்.
1400 பொற்காசுகளை குடநாட்டுப்பிரிவில் - கொற்கை, நல்லூர், சாலியத்தூர், புளியடி, கீரனூர்,
வழுதிவளநாட்டுப்பிரிவில் – வரகுணமங்கலம், இறைவழிமங்கலம், ஆலம்பாட்டம், மணிவீரப்பட்டினம்,.
ஸ்ரீவல்லபநாட்டுப்பிரிவில்- கட்டாறைமங்கலம், பறைசுமங்கலம்,
பராந்தகவளநாட்டுப்பிரிவில்- மாறமங்கலம், தென்றக்கீழூர்.
அமிர்தவளநாட்டுப்பிரிவில்- அவனிபசேகரமங்கலம் ஆகிய 16 ஊர்களின் மன்றங்களுக்கு கொடுத்து வட்டியாக 2799 கலம் 14 குறுணை நெல்லையும், வழிபாட்டிற்குத் தேவையான பூ, துணி, சந்தணம், வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சை, நெய், இளநீர், தேன், சூடன், மஞ்சள், காயம், பச்சபயறு, பச்சைக்கற்பூரம், ஆகியவற்றையும் வழங்கிடக் கூறியுள்ளார்.
சுவையானத் தகவல்கள் –
1] பொற்காசுகளை வட்டிக்குக் கொடுத்து வட்டியாக பொருட்களை பண்டமாற்று முறையில் பெற்றுள்ளனர். 2] வட்டி உரிய காலத்தில் கொடுக்கவில்லையென்றால் அபராதமாக இருமடங்காக செலுத்தக் கூறப்பட்டுள்ளது. 3] வைப்புநிதி மூலம் வட்டி பெறப்பட்டு அன்னதானம், வழிபாடு, திருப்பணி செய்வதற்கு இரண்டாம் வரகுண பாண்டியன் முன்னோடியாக இருந்துள்ளார். 4] அக்காலத்தில் ஒரு காசுக்கு 1000 வாழைப்பழம், 10 கலம் நெல், 7 துலாம் , 65 பலம் சர்க்கரை, 20 துலாம் காய்கறிகள், 60 நாழி காயம், 1220 பற்று வெற்றிலை, 10,000 பாக்கு 150 நாழி பூக்கள், 15 களஞ்சு கற்பூரம், ஒரு உரி புளி கிடைத்த செய்தியும் அறியலாகிறது.
---------------------------------------------------------
முனைவர் தவசிமுத்து மாறன்
சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம் சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப
Comments
Post a Comment