Skip to main content

Posts

Showing posts with the label கோயில் கட்டடக் கலை

நெடுவாசல்

“பஞ்சவன் மாதேவி” பள்ளிப்படை

“பஞ்சவன் மாதேவி” பள்ளிப்படை கோயிலுக்குபோகணும்….வழி….என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, “ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. “பட்டீஸ்வரம்” தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான “பழையாறை” செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!. தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த “பஞ்சவன் மாதேவி” , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த ...

ஆழ்வார் திருநகரி

பலகணி (ஜன்னல் ) கலைநுணுக்கத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. - ஆழ்வார் திருநகரி. Thanks- K.Govindarajan

கோயில் கட்டிடக்கலை

ஒரு விமானத்தின் முகப்பிலேயே கோபுரம் போன்றதொரு ஒருதள அமைப்பை அமைப்பதற்கு ப்ரதோலி என்று பெயர். மல்லை கடற்கரை கோயிலில் இத்தகைய ப்ரதோலியைப் பார்க்கலாம். ப்ரதோலி என்னும் சொல்லிற்கு ராஜவீதி என்ற பொருளும் உண்டு. ஆனால் கோயில் கட்டிடக்கலையில் ப்ரதோலி என்பது முகப்பில் அமையும் கோபுரம் போன்ற பகுதி என்றே பொருள் கொள்ள வேண்டும். இதற்குப் படிக்கட்டும் அமைக்கலாமென்று மானஸாரம் கூறுகிறது. Thanks-G.Sankara narayanan