Skip to main content

Posts

Showing posts from June, 2021

கருங்குளம் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக விளங்குகிறது கருங்குளம் வெங்கடாஜலபதி திருக்கோயில். மூலவர் வெங்கடாஜலபதி தனித் தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக, சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தினை பொறுத்தவரை மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். சைவ-வைணவ இணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது இத்தலம். சப்த ரிஷிகளும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து வேத வேள்வி புரிந்து வந்தனர். வேதவதி எனும் தீர்த்தத்தில் தங்கியிருந்தனர். அப்போது, ஸ்வேத முனிவரிடம் வகுளகிரி மலையானாகிய வைகுண்டநாதரின் புகழை கூறுமாறு பிற முனிவர்கள் வேண்டிக் கொண்டனர். அவர் விரிவாகக் கூறினார். பாஞ்சல நாட்டை சித்ராங்கதன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கிருதமாலா. சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த அவனுக்கு தன் முப்பதாவது வயதில் வயிற்று வலி ஏற்பட்டது. ராஜ வைத்தியம் தோற்றுப் போனது. நீங்காத வலியால் அவதிப்பட்டான். இதற்கு மரணமே தேவலாமோ என்று எரிச்சலுற்றான். அப்போது நாரதர் அங்கே வந்தார். அவனுடைய வேதனையை க

ஸ்ரீ வைகுண்டம் ஆழ்வார்தோப்பு அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி உடனாய ஸ்ரீ ஏகலிங்கநாதஸ்வாமி ஆலயம் -poto -Ahil Kattu

ஸ்ரீ வைகுண்டம் ஆழ்வார்தோப்பு அருள்மிகு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாய ஸ்ரீ ஏகலிங்கநாதஸ்வாமி ஆலயம்

நெல்லையப்பர் கோவில் வரலாறு

 முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து

திருச்செந்தூர் அருள்மிகு வெயிலுகந்த அம்மன்

முருகப்பெருமானுக்கு சக்தி வேல் வழங்கிய வெயிலுகந்தம்மன் கோவில் திருச்செந்தூரில் மற்றொரு சிறப்பு வாய்ந்த வெயிலுகந்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம். திருச்செந்தூர் என்றாலே அறுபடை வீடுகளில் 2-ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமான்தான் அனைவரது கண்முன்பும் வந்து நிற்கும். அதேபோல் சிறப்பு வாய்ந்த மற்றொரு கோவிலும் திருச்செந்தூரில் அமைந்து உள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா?. ஆம்! அந்த கோவிலின் பெயர் வெயிலுகந்தம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் கொலு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் ஸ்ரீ வெயிலுகந்தம்மன். தல விருட்சம் பன்னீர் மரம். தீர்த்தம்-வதனாரம்ப தீர்த்தம். திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது இக்கோவில். இனி இந்த கோவிலை பற்றியும், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்மனின் சிறப்புகளையும் காண்போம்!. கந்தபுராணத்தின்படி, முருகப்பெருமான் பத்மாசூரனை அழிப்பதற்கு முன்பே அவருடைய தாய் பராசக்தியானவள் திருச்செந்தூரில் அமர்ந்தருளியிருக்கின்றா