Skip to main content

Posts

Showing posts from March, 2021

சாணார் காசு

Devadhas நன்றி சேரர்களின் ஆட்சியில் சேரநாட்டில் அயல்நாட்டு வணிகத்துக்கு தங்கநாணயங்கள் புழக்கத்தில் இருந்தது . இதற்கு Venetian sequins என பெயர். இத் தங்க காசுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. சுத்த தஙகம் ஆனதால் ஆபரணங்கள் செய்யவும் இத்தங்ககாசுகள் பயன் படுத்தினர். இக்காசுகளை திருவிதாங்கூர் அரசு மக்களை மிரட்டி பறித்து அவற்றை கோவில் வேள்வியில் நம்பூதிரிகளுக்கு அளித்தனர். இவற்றை கைப்பற்ற கடினமாக இருந்ததால் திவான் ரமணிங்கர் இத்தங்ககாசுகள் செல்லாது என அறிவித்துவிட்டு இதனைப் போன்று ஆங்கிலேய நாணங்களுடன் இரண்டு புதிய நாணயங்களை அடித்தனர். பழைய தங்கக்காசுகளை சாணார் காசு என குறிப்பிட்டுள்ளனர். தற்போது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ஆறு அறை நகைகள் கணக்கெடுப்பில் இக்காசுகள் 70கிலோ இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

வேணாடு

Naanchil Natarajan நன்றி தமிழக வரலாற்றை திருத்தி எழுதவேண்டும்.... இன்று மக்களும் மாணவர்களும் ஆய்வாளர்களும் படிக்கிற வகையில் தமிழக வரலாறு பல அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் அடிப்படையில் இரண்டு தவறுகளைச் செய்துள்ளார்கள்--- [1] பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் வரலாற்றினை எழுதினார்கள், ஆனால், பிற்காலச் சேரர்களின் வரலாற்றை எழுதாது விட்டனர். அதனால் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சேரப்பேரரசை கட்டியெழுப்பிய குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள் எனத் தொடரும் பெருமாள் பரம்பரையினரையும், கி.பி. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் மகோதயபுரத்திலிருந்து ஆட்சி செய்த கோதை திருவடி, பாற்கர இரவி திருவடி போன்ற திருவடிப் பரம்பரையினரையும் தமிழர் அறியாது செய்தனர். சேரநாட்டின் வடபகுதி – மலபார் பகுதி - கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் ஆரியர் ஆதிக்கத்துக்கு உள்ளானது. ஆனால் கொச்சிக்குத் தெற்கில் வேணாடு எனும் பெயரில் தமிழர் ஆட்சி 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்தது, தமிழ் ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது. கி.பி.1310முதல் டில்லி சுல்தான்களின் படையெடுப்பிலிருந்து மொத்த தமிழகத்தை பல ஆண்டுகள் காத்ததும், விசயநகர

வேணாடு

Naanchil Natarajan நன்றி வேணாட்டு அரசர்களின் சாதனைகளை விளக்கும் கல்வெட்டுகள் பல தமிழகத்தில் உள்ளன. கி.பி.1122ஆம் ஆண்டு திருவாலஞ்சுழி கோயிலில் பதியப்பட்ட கல்வெட்டு அரசர் இராமர் திருவடி முதலாம் குலோத்துங்கனை தஞ்சாவூர் வரை விரட்டிச் சென்றதைக் குறிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன், பாண்டிய மன்னர் சடயன் வீரபாண்டியனிடமிருந்து பறித்துச் சென்ற செஙகோலையும் கிரீடத்தையும் வேணாட்டு அரசர் முதலாம் வீர உதயமார்த்தாண்டன் தஞ்சாவூருக்கு படையெடுத்துச் சென்று மீட்டுக் கொடுத்தார்.  கி.பி. 1310இல் பாண்டிய நாட்டின்மீது கொள்ளையடிக்க வந்த டில்லி சுல்தானின் படைத்தளபதி மாலிக்காபூரை வேணாட்டு அரசர் குலசேகரப்பெருமாள் திருவடி தமிழ்நாட்டைவிட்டே துரத்தினார். அதனால் அவருக்கு “மும்மண்டலாதிபதி” என பட்டம் சூட்டப்பட்டதாக 1311ஆம் ஆண்டின் காஞ்சிபுரம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மாலிக்கபூரால் சிதைக்கப்பட்ட சிறிரெங்கம் ரெங்கநாதர் கோயிலை அவர் சீரமைத்துக் கொடுத்ததாக சிறிரெங்கம் கல்வெட்டு கூறுகிறது. 1530இல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த செல்லப்பாநாயக்கர் எனும் சங்கரநாராயணனை வேணாட்டு அரசரான மூன்றாம் வீர உதயமார்த்தாண்டன் சிறைபிடித்

மாறவர்மன் சுந்தரபாண்டியன்

Solai Balakrishnan நன்றி திருவெள்ளறை.             முதல்  மறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1219 ஆண்டு சோழ நாட்டின் மீது படை எடுத்துச் சென்று சோழ மன்னன் மூன்றாம் இராசராச சோழனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.              சுந்தரபாண்டியன் படைடுப்பில் சோழரின் பழைய தலைநகராகிய உறையூரும், தஞ்சாவூரும் பாண்டிய நாட்டுப் போர்வீரர்களால் கொளுத்தப்பட்டன.                  சோழர்களின் பல மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் ஆடரங்களும் மணிமண்டபங்களும் இடிக்கப் பட்டு நீர்நிலைகளும் அழிக்கப் பெற்றன.          கரிகாற்பெருவளத்தான் சோழன் தன் மீது பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்குப் பரிசிலாக வழங்கிய இருந்த பதினாறு கால் மண்டபம் ஒன்று தான் சோழ நாட்டில் இடிக்கப்படாமல் விடப்பட்டதென்றும் பிற எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் திருவெள்ளறையில் செய்யுளாக உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு கூறுகின்றது.            கரிகாற்சோழன் புலவர் உத்திரங்கண்ணனுக்கு பரிசிலாக கொடுத்த மண்டபம் என்பதை தெரிந்து சுந்தரபாண்டியன் தமிழ்ப் புலவரின் நினைவாக உள்ள மண்டபத்தை அழிக்காமல்,  மாறாக தான் அதை மட்டும் க

தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்

#நவகைலாசம்

குடவோலைத் தேர்தல்

Marirajan Rajan  நன்றி " குடவோலைத் தேர்தல் " இது தேர்தல் நேரம்.. வழக்கமாய் இந்த நேரத்தில் ஒரு கல்வெட்டுச் செய்தியை பகிர்வோம்.. தமிழர்களின் பண்டைய குடவோலைத் தேர்தல் முறை. உத்ரமேரூர் கல்வெட்டு. குடவோலைத் தேர்தல் முறை சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகிறது. காலத்தால் மிக மூத்த தொல்லியல் ஆவணமாக முற்கால பாண்டியன் மாறஞ்சடையனின் மானூர் கல்வெட்டு குடவோலை தேர்தல் பற்றிக் கூறுகிறது. உத்ரமேரூர் பராந்தகச்சோழனின் கல்வெட்டு குடவோலை முறையை விரிவாகப் பதிவு செய்கிறது.  உத்ரமேரூர் ஊர்சபை  12 சேரிகளாகவும்., 30 குடும்புகளாகவும் ( வார்டு)  பிரிக்கப்பட்டு வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ..  1. ஆண்டு வாரியம். 2. ஏரி வாரியம். 3.பொன் வாரியம். 4 பஞ்சவாரியம். போன்ற வாரிய உறுப்பினர்களாக ஊர்சபையின் பணியாளர்களாக இருப்பார்கள்.. இவ்வாரிய உறுப்பினர்கள் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் நிற்பதற்கானத் வேட்பாளர்களின் தகுதி. தேர்தல் நடைபெற்ற முறை ஆகிய செய்திகள் விரிவாக

திருமலாபுரம் குடைவரை | தென்காசி

திருமலாபுரம் குடைவரை | தென்காசி தென்காசி மாவட்டத்தில் திருமலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள இக்குடைவரைகள் கிபி எட்டாம் நூற்றாண்டளவிலான பாண்டியர் கால குடைவரையாக அறியப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் இவற்றுள் ஒன்று முற்று பெறாத குடைவரை. கருவறையில் இலிங்கம் தாய்ப்பாறையிலே செதுக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு பாறையிலே செதுக்கப்பட்ட நந்தி சிலை சிதைக்கப்பட்டுள்ளது. பிரம்மா, ஆடற் கோலத்தில் சிவன், நின்ற நிலை திருமால், விநாயகர் மற்றுமிரு துவார பாலகர்கள் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. ( சொக்கம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் பாண்டியர் குடைவரைகளிலும் வேறு விதமான ஆடல் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன ) குடைவரை தூணில் ஒரேயொரு கல்வெட்டு காணப்படுகிறது. இடைக்காலப் பாண்டிய மன்னனான ஶ்ரீ வல்லபனின்( ? ) சிதைந்த கல்வெட்டு. படிக்க முயன்றது வரையில், அரசன் பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலத்து கோயிலுள்ளால் அழகிய பாண்டியன் கூடத்து பாண்டிய

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ

கொங்கு நாட்டுக்கோயில்கள்

கீரணத்தம் தெய்வசிகாமணி கவுண்டர்-மருதம்மாள் நினைவு அறக்கட்டளை #சிறப்புச்சொற்பொழிவு – முனைவர் இரா.#பூங்குன்றன்,  கல்வெட்டறிஞர். தலைப்பு :  #கொங்கு #நாட்டுக்கோயில்கள் கோயில் கட்டும் மரபு சங்ககாலம் தொடக்கம். ஆனைமலையில் கல்பதுக்கை ஒன்றில் கோயில் கருவறை போன்ற சதுர அமைப்பு உள்ளது. மாமல்லபுரத்தில் அண்மையில் முருகன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்முருகன் கோயில் பற்றிப்பல்லவமன்னன் தந்திவர்மனின் கல்வெட்டில் குறிப்பு காணப்படுகிறது. தமிழகக்கோவில்கள் கடவுள் வழிபாட்டிற்காக மட்டும் அமைந்தவை அல்ல. மக்கள் சமுதாயத்துக்குப்பயன் தருகின்றவகையில் அவை இயங்கின. கோவில் பண்டாரங்கள் மக்களுக்குக் கடன் வழங்கியுள்ளன. நாட்டில் பஞ்சம் நிலவிய காலங்களில் கோவில் நகைகள் பயன்பட்டிருப்பதைச்செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்த நகைகளை மக்களே மீண்டும் கோவிலுக்குத்திருப்பியளித்தனர். கோவில்கள் எத்துணை இன்றியமையாதன என்பதைப் பட்டினப்பாலை வரிகள் உணர்த்தும். ”குளந்தொட்டு வளம் பெருக்கிக்கோயிலொடு குடி நிறீ“ என்பது அந்த வரி. தமிழகத்தின் பிற பகுதிக்கோயில்களுக்கும் கொங்கு நாட்டுக்கோயில்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.  கொங்கு நாட்டில்