Naanchil Natarajan நன்றி
தமிழக வரலாற்றை திருத்தி எழுதவேண்டும்....
இன்று மக்களும் மாணவர்களும் ஆய்வாளர்களும் படிக்கிற வகையில் தமிழக வரலாறு பல அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் அடிப்படையில் இரண்டு தவறுகளைச் செய்துள்ளார்கள்---
[1] பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் வரலாற்றினை எழுதினார்கள், ஆனால், பிற்காலச் சேரர்களின் வரலாற்றை எழுதாது விட்டனர். அதனால் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சேரப்பேரரசை கட்டியெழுப்பிய குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள் எனத் தொடரும் பெருமாள் பரம்பரையினரையும், கி.பி. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் மகோதயபுரத்திலிருந்து ஆட்சி செய்த கோதை திருவடி, பாற்கர இரவி திருவடி போன்ற திருவடிப் பரம்பரையினரையும் தமிழர் அறியாது செய்தனர்.
சேரநாட்டின் வடபகுதி – மலபார் பகுதி - கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் ஆரியர் ஆதிக்கத்துக்கு உள்ளானது. ஆனால் கொச்சிக்குத் தெற்கில் வேணாடு எனும் பெயரில் தமிழர் ஆட்சி 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்தது, தமிழ் ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது. கி.பி.1310முதல் டில்லி சுல்தான்களின் படையெடுப்பிலிருந்து மொத்த தமிழகத்தை பல ஆண்டுகள் காத்ததும், விசயநகர நாயக்கராட்சி தென்தமிழகத்தில் வராமல் 100 ஆண்டுகள் காத்ததும் வேணாட்டுத் திருவடி அரசர்கள். இந்தச் செய்தியும் மக்களுக்குச் சொல்லப்படவில்லை.
இவற்றால்மலையாள மொழி 1500 ஆண்டுகள் வரலாறு கொண்டது போன்ற தோற்றம் ஏற்பட ஏதுவாயிற்று.
[2] ஆந்திரப் பகுதியிலிருந்து படையெடுத்து வந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய தெலுங்கு நாயக்கர் ஆட்சியை தமிழர்க்கான ஆட்சி போன்று தமிழக வரலாற்றில் காட்சிப் படுத்திவிட்டனர். சில நூல்களில் திருமலை நாயக்கர் ஆட்சி பொற்காலம் எனும் அளவுக்குச் சொல்லப்பட்டுள்ளது. நாயக்கராட்சியில் தமிழுக்கும் தமிழர்க்கும் நடந்த கேடுகள் மறைக்கப் பட்டுவிட்டன. உண்மை உள்ளபடி பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த மாற்றங்களைத் தாங்கிய தமிழகவரலாறு எழுதப்பட வேண்டும். அதற்காக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். ஆனால் இது எழிதான வேலையல்ல. தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தையும் பாடநூல்களையும் தெரிவு செய்யும் அமைப்புகளில் பிறமொழியாளர் நிறைய உள்ளனர். தமிழ்நாடு வரலாற்றுப் பேராயம் (Tamilnadu History Congress) எனும் அமைப்பு பிற மொழியாளர் ஆதிக்கத்தில் உள்ளது. இவர்களே ‘அறிஞர்கள்’ என முத்திரை குத்தப் பட்டுள்ளார்கள். இவர்களை மீறி தமிழக அரசும் பாடத்திட்டத்தை மாற்ற முடியாது. இந்த உண்மை வெளியே தெரியாமலிருக்கவே சாதிப்பெயர்களைச் சொல்லாமலிருப்பது “முற்போக்கு” என பிரச்சாரம் செய்யப்படுகிறது.
எனவே கீழடிக்கு ஏற்பட்ட தமிழர் எழுச்சி வரலாற்று மறு சீரமைப்புக்கும் தேவைப்படுகிறது. இது ஒரு மக்கள் இயக்கமாக வரவேண்டும்.
சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம் சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப
Comments
Post a Comment