Skip to main content

Posts

Showing posts with the label தொல்லியல்

குடவோலைத் தேர்தல்

Marirajan Rajan  நன்றி " குடவோலைத் தேர்தல் " இது தேர்தல் நேரம்.. வழக்கமாய் இந்த நேரத்தில் ஒரு கல்வெட்டுச் செய்தியை பகிர்வோம்.. தமிழர்களின் பண்டைய குடவோலைத் தேர்தல் முறை. உத்ரமேரூர் கல்வெட்டு. குடவோலைத் தேர்தல் முறை சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகிறது. காலத்தால் மிக மூத்த தொல்லியல் ஆவணமாக முற்கால பாண்டியன் மாறஞ்சடையனின் மானூர் கல்வெட்டு குடவோலை தேர்தல் பற்றிக் கூறுகிறது. உத்ரமேரூர் பராந்தகச்சோழனின் கல்வெட்டு குடவோலை முறையை விரிவாகப் பதிவு செய்கிறது.  உத்ரமேரூர் ஊர்சபை  12 சேரிகளாகவும்., 30 குடும்புகளாகவும் ( வார்டு)  பிரிக்கப்பட்டு வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ..  1. ஆண்டு வாரியம். 2. ஏரி வாரியம். 3.பொன் வாரியம். 4 பஞ்சவாரியம். போன்ற வாரிய உறுப்பினர்களாக ஊர்சபையின் பணியாளர்களாக இருப்பார்கள்.. இவ்வாரிய உறுப்பினர்கள் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் நிற்பதற்கானத் வேட்பாளர்களின் தகுதி. தேர்தல் நடைபெற்ற முறை ஆகிய செய...

திருமலாபுரம் குடைவரை | தென்காசி

திருமலாபுரம் குடைவரை | தென்காசி தென்காசி மாவட்டத்தில் திருமலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள இக்குடைவரைகள் கிபி எட்டாம் நூற்றாண்டளவிலான பாண்டியர் கால குடைவரையாக அறியப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் இவற்றுள் ஒன்று முற்று பெறாத குடைவரை. கருவறையில் இலிங்கம் தாய்ப்பாறையிலே செதுக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு பாறையிலே செதுக்கப்பட்ட நந்தி சிலை சிதைக்கப்பட்டுள்ளது. பிரம்மா, ஆடற் கோலத்தில் சிவன், நின்ற நிலை திருமால், விநாயகர் மற்றுமிரு துவார பாலகர்கள் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. ( சொக்கம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் பாண்டியர் குடைவரைகளிலும் வேறு விதமான ஆடல் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன ) குடைவரை தூணில் ஒரேயொரு கல்வெட்டு காணப்படுகிறது. இடைக்காலப் பாண்டிய மன்னனான ஶ்ரீ வல்லபனின்( ? ) சிதைந்த கல்வெட்டு. படிக்க முயன்றது வரையில், அரசன் பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலத்து கோயிலுள்ளால் அழகிய பாண்டியன் கூடத்து பாண்டிய...

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் கோயில்

பழைய தஞ்சாவூர் ... தஞ்சை பெரியகோயில் ... 800 ஆண்டுகளாக  புதைந்து கிடந்த உண்மை ...  இதன் பெருமை வாய்ந்த வரலாறு அதன் சுற்றுசுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தும் கூட,  உள்ளூர் மக்கள் பெரிய கோவிலை  ஆவணப்படுத்த தவறி விட்டார்கள். 1860 க்கு முன்னர் கோயிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையிலேயே 800 ஆண்டுகளாக  இருந்து வந்தது .. . 1858 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பிறகு, புனித பீட்டர்ஸ்  பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த, ஆங்கிலேய  கிருத்துவ பாதிரியார் மற்றும்   தலை சிறந்த தமிழ் அறிஞருமாகிய  ஜி.யூ.போப்  (Rev.G.U.Pope அவர்களின் சிலை சென்னை மெரினா கடற்கரையில் தமிழக அரசால் 1968ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது),   பெரிய கோவிலை ஆவணப்படுத்துமாறு கோரப்பட்டார்.  அதன் விளைவாக தஞ்சை பெரிய கோயில்,  ஒரு சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று ஆவணப்படுத்திய முதல் நபர் அவர்தான். உள்ளூர் அறிஞர்களிடமிருந்து  விசாரித்ததில் பெரிய கோயில் "காஞ்சிபுரத்து காடுவ...