Skip to main content

ஆறுமுகனேரியில் சுமார் 700 ஆண்டு பழமையான திருவாழிக்கல் மாயக்கூத்தன் பெயரிட்டது அறியப்பட்டுள்ளது

ஆறுமுகனேரியில் சுமார் 700 ஆண்டு பழமையான  திருவாழிக்கல் மாயக்கூத்தன் பெயரிட்டது அறியப்பட்டுள்ளது
       ஆறுமுகனேரி  அடைக்கலாபுரம்  சாலையிலில்   ஓர் பழமையான எல்லைக்கல் இருப்பதறிந்த எம்.ராஜ்குமார் கூறியதன் பேரில், திருச்செந்தூர் அரசுஆண்கள் மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் அ.கார்த்திகேயன் அவருடன் வந்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர், அரசின் தொல்லியல் துறையின் கோடைகாலக் கல்வெட்டு  பெற்ற முனைவர் த,த,தவசிமுத்து  இதுகுறித்து கூறியதாவது ;

           தற்போது   ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் செல்லும் பெட்ரோல் பல்க் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் கிடைத்துள்ள திருவாழிக்கல்லில் கீழே உள்ள எழுத்துக்கள் வெள்ளைக்கல் என்பதால் அழிந்துள்ளன, இக்கல் சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதலாம். இக்கல்வெட்டில்’’ மாயக்கூத்தன்’  என்ற வரிகள்  காணப்படுவது சிறப்பாகும்.திருவாழிக்கல் (  ஆழி – சக்கரம்  ) பெருமாள் கோயில் வழிபாடு தடையற நடைபெறுவதற்காக    முன்பு  அக்காலத்தில் அரசு அதிகாரம் பெற்ற அலுவலரின்  ஒப்புதலோடு வரி நீக்கி நிலம் மானியமாக வழங்கப்பட்டு, அந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்த எல்கைக் கல் ஆகும், நான்கரை அடி நீளமும் ஒரு அடி அகலமும் பின்புறம் சுமார் அரை அடி ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ளது, திருவாழிக்கல்லை ஏதேனும் காரணத்தால் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திலிருந்து தற்போதுள்ள இடத்தில் எடுத்து போட்டிருக்கலாம்,   தற்போது அந்த கல்லானது சரிந்து கிடப்பதால் எந்த இடத்தில் நட்டுவிக்கப்பெற்றது என்பதை அறிய இயலவில்லை, நவதிருப்பதிகளுள் ஒன்றான பெருங்குளம் ஊரில் உள்ள பெருமாளின் பெயர் மாயக்கூத்தன் என்பதால்கிடைத்துள்ள திருவாழிக்கல்லுக்கும். பெருங்குளத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆய்வுக்குறியது,   
         பழங்காலத்தில் கோயில்களின் வழிபாட்டிற்காக அரசர்கள் நிலத்தை வரி நீக்கி தானமாக வழங்குவர் சிவன் கோயிலுக்குரிய நிலம் தேவதானம் எனப்படும். நட்டுவிக்கப்படும் கல்லில் திரிசூலம் பொறிக்கப்பட்டு நிலம் பற்றிய செய்தியும் எழுதப்பட்டு இருக்கும் அது சூலக்கல் எனப்படும். புத்த, ஜைன பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிலம் பள்ளிச்சந்தம் எனப்படும். பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு, மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவர் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் மங்கலச் சொல் ஸ்வஸ்திஸ்ரீ என இருக்கும். ஸ்ரீமது, சுபமஸ்து, நமசிவாய, சித்தம் என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு.                                                                                                                                             
         கல்வெட்டு எந்த அரசன் காலத்தைச் சேர்ந்ததோ பெருமைகள், போர் வெற்றிகள் முதலிய செய்திகள் மெய்க்கீர்த்தி பகுதியில் இடம்பெறும். இவ்வாறு மெய்க்கீர்த்திகள் மூலம் மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள முடியும்
          கல்வெட்டில் மன்னர்களின் ஆட்சியாண்டு இடம் பெற்றிருக்கும். சில கல்வெட்டுகளில் கலியுகம், சாலிவாகன சகாத்தம், கொல்லம் போன்ற ஆண்டுகள் குறிப்பிடப்படும்.
       இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதற்காக, கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் கொடைச் செய்தியில் குறிக்கப்படும். கொடையாக வழங்கப்பட்ட இடம் உள்ள நாடு, ஊர் முதலிய விபரங்களும்,  அதன் நான்கு எல்லைகளும் இதில் குறிக்கப்பட்டிருக்கும். வழங்கப்பட்ட கொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர்.
       அளிக்கப்பட்ட கொடையை காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் காப்புச் சொல் பகுதியில் எழுதப் பெற்றிருக்கும். கல்வெட்டை எழுதியவர்கள் பெயர் இறுதிப் பகுதியில்  இருக்கும்.     

இந்தக்கல்வெட்டில் மாயகூத்தன் என்ற வரிகள் மட்டுமே தெளிவாக உள்ளது மற்றவரிகள் தேய்ந்துள்ளன.
தமிழ்நாடு அரசு  அருங்காட்சியகத்தில் இந்த திருவாழிக்கல்லை  பாதுகாத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள

Comments

Popular posts from this blog

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்                                                      தொல் பழங்காலத்திற்கு முன்பாகவே தமிழர்கள் தங்களுடைய கலை மற்றும் அழகுணர்ச்சியை அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.    இயற்கையைத் தெய்வமாகவும் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட தமிழ் இன மக்கள் தங்களுடைய முதல் அணிகலனை இயற்கையின் எழில்மிகு கற்கள் , பூக்கள் ,   கொடி , ஓலை[1]ஆகியனவற்றை அணிந்து மகிழ்ந்தான். இது தொடர்ச்சியாக உலோகங்களுக்கும் அடிகோலின. கலைத்திறனை வெளிப்படுத்தும் பயன்படு பொருளாகவும் ஒவ்வொரு காலத்திலும் அணிகலன்கள் விளங்குகின்றன.          மனிதகுலத்திற்கு    புலன்கள் அவசியமாக கருதப்பெற்றன.தமிழன் அப்புலன்களின் உறுப்புகளுக்கு அழகூட்டிட அணிகளால் சிறப்புற மெருகூட்டினான்.சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியான இலக்கண நூலான தொல்காப்பியத்தில்    ‘’ காதொன்று களைதல் ’’ [2]  என்ற பாடல் அடியிலிருந்து காதணி பற்றிய செய்தியை அறியமுடிகின்றது.        இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் ,               செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்               செல்வத்துள்