மூக்கறுப்பு கல்வெட்டு :- .. மைசூர் மன்னர் கந்திருவ நரச ராஜாவுக்கும் மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடையே நடந்த மூக்கறுப்பு போர் நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. எ வாயேஜ் டு தி ஈஸ்ட் இண்டியா என்னும் நூலை எழுதிய ஜெ.எச்.குரோஸ் மைசூர் படையின் தனித்துவமாக மூக்கறுப்பு இருந்தது. அவர்கள் மிகச்சாமார்தியமாகவும் எளிதாகவும் மூக்கை அறுத்து மைசூருக்கு அனுப்பி வைத்தனர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் 1679 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்து தீர்மானம் ஒன்றில் மூக்கறுப்பு செயல்பாடு பற்றிய குறிப்பொன்றும் இடம் பெற்றுள்ளது (மதுரை நாயக்கர் வரலாறு ,பக்கம் 147 ஆசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர்) இவை மட்டுமே மூக்கறுப்பு போருக்கு ஆதாரமாய் இருந்தன...கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை. மதுரை மீது வலிந்து சண்டைக்கு போன மைசூர் அரசர் கந்திருவ நரச ராஜா 1656 ல் சத்திய மங்கலத்துக்குள் ஊடுருவ உத்தரவிட்டார். இந்த சத்தியமங்கலம் சேலம் மாவட்டத்தில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாய் இப்போதும் 1652 ஆம் ஆண்டின் சேலம் மாவட்டத்து எருமைப்பட்டி கல்வெட்டு சான்றாக உள்ளது. 1655-56 ஆம் ஆ...