Skip to main content

Posts

Showing posts from February, 2017

கொற்கை தமிழனின் அடையாளம்

கொற்கை தமிழனின் அடையாளம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முக்காணியிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.ஏரல் வழியாகவும் பழைய காயல் வழியாகவும் வருவதற்கு அரசு பஸ்களும், மினி பஸ்கள் உண்டு.ஆட்டோ மூலமும் வரலாம்.... தற்போதைய கொற்கை.பசுமையான வயல்வெளி.வாழத் தோட்டங்கள் காணுமிடங்களிலெல்லாம் சிப்பிகளும் சங்குகளும் குவியல் குவியலாக. முத்தால் உலகத்தை தன்னிடம் ஈர்த்து வைத்திருந்த கொற்கையா இது.....வாளும் வேலும் வீசி விளையாடிய வீதிகளா இவை.... சங்ககாலம் தமிழனின் பொற்காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரை , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய சிறிய படகுத் துறைகளாக காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் ஏரல்,உமரிக்காடு ,வாழவல்லான், முக்காணி,த்தூர் , ஆறுமுகநேரி , பழையகாயல் , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்கள் . கொற்கைக் குடாக்கடல

திருநறுங்கொண்டை குகைப் பள்ளி

சமணகற்பயணம் திருநறுங்கொண்டை குகைப் பள்ளி:- தென்னார்க்காடு மாவட்டத்தில் உளுந்தூரப்பேட்டைத் தாலுகாவைச் சிற்றூர் திருநறுங்கொண்டையாகும். இந்த மலையின் மேற்பகுதியில் இயற்கையாக உள்ள குகையும் அதனையடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பாண்டைநாதர் கோயிலும் காணப்படுகின்றன. இதனுள் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை பத்து அடி நீளமும் மூன்றடி அகலமும் உடையனவாகும். இவற்றுள் ஓரிரு படுக்கைகள் அண்மைக் காலத்தில் உடைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த படுக்கைகளின் தலைப் பகுதியில் படிக்கட்டு போன்ற தலையணைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இக் கற்படுக்கைகளுக்கு அருகில் குகையின் வடக்குப்பக்கமாகப் பதினைந்து அடி நீளமும் ஐந்து அடி அகலமும் உடைய மேடை போன்ற அமைப்பு ஒன்று காணப்படுகிறது. இவை இங்கிருந்த துறவியர் குழுவின் தலைவர் வீற்றிருந்த ஆசனமாகவோ அல்லது அருகக் கடவுளுக்கு வழிபாடு நடத்தப் பயன் படுத்தப்பட்ட மேடையாகவோ இருக்கலாம். இங்குள்ள குகையில் கற்படுக்கைகள் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலேயே அதாவது கிபி 7-அல்லது 8-ஆம் நூற்றாண்டிலேயே சமண சங்கமும் நிறுவப்பட்டிருக்க

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் Thanks-Thirukumaran Kumaran

கோவிந்தவாடி அகரத்துக் கொடுங்கை

Thanks _SankaraNarayanan

கங்கைகொண்டசோழபுரம் ,கலிங்கநாட்டிலிருந்துகொண்டுவரப்பட்டகாளி

கங்கைகொண்டசோழபுரம் ,கலிங்கநாட்டிலிருந்துகொண்டுவரப்பட்டகாளி

கங்கை கொண்ட சோழனின் மெய்க்கீர்த்தி

கங்கை கொண்ட சோழனின் மெய்க்கீர்த்தி ஸ்வஸ்திஸரீ திருமன்னி வளர இருநில மடந்தையும் போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும் தன்பெருந் தேவியர் ஆகி இன்புற நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும் துடர்வன வேலிப் படர்வன வாசியும் - - - - - - - - 5 சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும் நண்ணற்கு அருமரண் மண்ணைக் கடக்கமும் பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த - - - - - - - -10 சுிந்தர முடியும் இந்திரன் ஆரமும் தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும் எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும் குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத் - - - - -15 தொல் பெருங்காவல் பல்பழந் தீவும் செருவில் சினவி இருபத்து ஒருகால் அரைசு களைகட்ட பரசு ராமன் மேவரும் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும் - - - 20 பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியல் இரட்ட பாடி ஏழரை இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் - - - - - - - 25 முதிர்பட வல்லை மதுர மண்டலமும் காமிடை வளைய நாமணை