Skip to main content

திருநறுங்கொண்டை குகைப் பள்ளி


Image may contain: outdoor
Image may contain: sky, outdoor and natureImage may contain: outdoor

Image may contain: outdoorImage may contain: outdoor

No automatic alt text available.

Image may contain: outdoorImage may contain: cloud and outdoor


No automatic alt text available.Image may contain: cloud and outdoorImage may contain: outdoor
Image may contain: outdoor and waterImage may contain: outdoorNo automatic alt text available.Image may contain: outdoor

சமணகற்பயணம்
திருநறுங்கொண்டை குகைப் பள்ளி:-
தென்னார்க்காடு மாவட்டத்தில் உளுந்தூரப்பேட்டைத் தாலுகாவைச் சிற்றூர் திருநறுங்கொண்டையாகும்.
இந்த மலையின் மேற்பகுதியில் இயற்கையாக உள்ள குகையும் அதனையடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பாண்டைநாதர் கோயிலும் காணப்படுகின்றன.
இதனுள் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இவை பத்து அடி நீளமும் மூன்றடி அகலமும் உடையனவாகும்.
இவற்றுள் ஓரிரு படுக்கைகள் அண்மைக் காலத்தில் உடைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இந்த படுக்கைகளின் தலைப் பகுதியில் படிக்கட்டு போன்ற தலையணைகள் வெட்டப்பட்டிருக்கின்றன.
இக் கற்படுக்கைகளுக்கு அருகில் குகையின் வடக்குப்பக்கமாகப் பதினைந்து அடி நீளமும் ஐந்து அடி அகலமும் உடைய மேடை போன்ற அமைப்பு ஒன்று காணப்படுகிறது.
இவை இங்கிருந்த துறவியர் குழுவின் தலைவர் வீற்றிருந்த ஆசனமாகவோ அல்லது அருகக் கடவுளுக்கு வழிபாடு நடத்தப் பயன் படுத்தப்பட்ட மேடையாகவோ இருக்கலாம்.
இங்குள்ள குகையில் கற்படுக்கைகள் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலேயே அதாவது கிபி 7-அல்லது 8-ஆம் நூற்றாண்டிலேயே சமண சங்கமும் நிறுவப்பட்டிருக்கலாம்.
இந்த வீரசங்கத்தைச் சார்ந்த துறவியர் கி பி. 9ஆம் நூற்றாண்டில் திருத்தலங்களுக்குச் சென்று அருள் நெறி பரப்பியுள்ளனர்.
கல்வெட்டுக்கள்:-
திருநறுங்கொண்டைவிலுள்ள குகையின் முகப்பில் இருசாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இவையிரண்டும் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுச் சார்ந்தவையாகும் ஒரு சாசனம் குகையை அடுத்துள்ள கீழைப் பள்ளியாகிய சந்திர நாதர் கோயிலை விசய நல்லுழான் குமரதேவன் என்பவர் கட்டியதைக் கூறுகிறது.
அடுத்துள்ள சாசனம் மிகவும் சிதைந்த நிலையில் இருக்கிறது.
இதில் வாணகோவரையன் என்னும் சிற்றரசனது பெயரினைத் தவிர எஞ்சியவை அனைத்தும் அழிந்து விட்டது.
இந்த இரண்டு கல்வெட்டுக்களும் குகைப் பாழியில் படுக்கைகள் அமைத்தது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில்
மிகவும் முக்கியமானவர்
திருநாவுக்கரசர் என்கிற அப்பர். அவர்
தன் வாழ்வின் முற்பகுதியில்
தருமசேனர் எனும் பெயருடன் சமண
சமயத்தவராக இருந்தார். பின் சைவ
மதத்திற்கு மாறி திருஞானசம்பந்தருட
பல சிவத் தலங்களைத் தரிசித்தார்.
அப்பருக்கு மரியாதை
ஒருநாள் அப்பர் கடலூர் மாவட்டம்
உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள
திருநறுங்கொண்டை கிராமத்தை
அவ்வூரிலிருந்த ஜைனர்கள்
அவரை அன்புடன் வரவேற்று அவர்
அகிம்சையைப் போதிப்பதால் அவர்
மீது அன்பும் மரியாதையும் அதிகம்
என்றனர். அப்பர் அகம் மகிழ்ந்து,
அந்த ஊரில் உள்ள ஜைனக் கோயிலைக்
காணச் சென்றார்.
அங்கு குற்றங்களில்லான்
குணத்தால் நிறைந்தான் அருகன்
பார்சுவநாதரைக்கண்டு, “நற்றமிழ்சேர்
நறுங்கொண்டை யருகாவுன்னை
நின்பதத்தை நல்குவாயே” எனப்
பதிகங்களைப் பாடினார். இதனால்
சமணர்கள், உம்மை அருகர்
ஆட்கொண்டார்
என்று கருதுகிறோம் எனக்கூறி,
பார்சுவநாதரை “அப்பரை ஆண்டவர்’
என புகழ்ந்தனர். இன்றும்
அக்கடவுளை அப்பாண்டநாதர்
என்றே வழிபடுகின்றனர்.
சம்பந்தரும்
“ஆதியே திருநறுங்கொண்டை வடதி
அஞ்சல் என்றருளே” எனப்
பதிக்கங்களைப் பாடினார்.
அறப்பாவலர் அர்க்ககீர்த்தி,
“தவத்தவ முனிவர்தாள் பணிந்தேத்திய
பவப்பிணி போக்கிடும் பாரீசநாதா”
என்கிறார்.
இயற்கையே உருவாக்கிய கோவில்
இக்கோயில் மலை மீது உள்ளது.
மேலே செல்லுமுன்
தொடக்கத்திலுள்ள
சேத்திரபாலகரை வணங்கி படியேறுகின்ற
அன்பர்கள். கீழே சனிபகவான்
உள்ளார்.
இது இயற்கையே உருவாக்கிய கோயில்போல்
இருக்கிறது. இரு பெரும் பாறைகள்
கிழக்கும் மேற்குமாய்
எதிரேதிரே நின்று உச்சியில்
இணைந்துள்ளன. கிழக்குப் பாறையில்
உட்பகுதியின் கீழே அப்பாண்டநாதர்
அணியா அழகராக, மேற்கு நோக்கிக்
காட்சியளிக்கிறார்.
மேலும் பகவான் சந்திரநாதர்,
பத்மாவதி அம்மன் சந்நிதிகள்
இருக்கின்றன. சுனை ஒன்றும் உள்ளது.
பல முனிவர்கள் தவமிருந்த குகையும்
கற்படுக்கைகளும் கல்வெட்டுகளும்
உள்ளன. இங்கு குணபத்திர முனிவர்
என்பவர் ‘வீர சங்கம்’ நிறுவி கல்வித்
தொண்டு செய்துள்ளார்.
அப்பரும் சம்பந்தரும், இவரையும்
வீரசங்கத்தையும் போற்றிப்
பாடி உள்ளனர். கம்பர்
ராமாயணத்திற்கு வீரசங்கத்தின்
அங்கீகாரம் பெற்றார் என்ற
நம்பிக்கை உண்டு.
குணபத்திரர், சூடாமணி நிகண்டுத்
தந்த மண்டலபுருடரின் குரு ஆவார்.
அப்பாண்டநாதர் உலா,
திருமேற்றிசை அந்தாதி,
திருநறுங்கொண்டை தோத்திரமாலை
பற்றிய நூல்களாகும்.
ஆதரித்த அரசர்கள்
ஒரு சமயம் வேடன் ஒருவன் மண்
மூடியிருந்த பகுதியில்
தோண்டும்போது அப்பாண்டநாதரின்
திருவுருவம் தெரியவர, சோழர் கோயில்
கட்டினார் என்கின்றனர். சோழர்,
பாண்டியர், பல்லவர், விஜயநகர
மன்னர், பல சிற்றரசர்கள்
இக்கோயிலை ஆதரித்துள்ளனர்.எனவே இக்கோ
நெடுங்கால அரசியல்
வரலாற்றுப் பின்னணி உள்ளது.
கோபுரத்தின் அடிப்பகுதி பரமஜினதேவர்
என்பவரால் கட்டப்பெற்றது.
இவர் பெயரில் கள்ளகுளத்தூர்
எனும் கிராமத்தில்
கற்பாறை மீது பாதங்கள்
உள்ளதால் இருவரும் ஒருவரோ எனக்
கருதப்படுகிறது.
இத்தலத்தின் வரலாற்றைப் புலவர்
மு.சண்முகம்பிள்ளை அவர்களும் முனைவர்
ஏ.ஏகாம்பரநாதன் அவர்களும்
புத்தகங்களாக
வெளியிட்டுள்ளார்கள்.
திருநறுங்கொண்டை அப்பாண்ட
கோயில் என்றும் சமணர்களுக்குப்
புண்ணிய இடமாகும்.
Thanks-சமணகற்பயணம்

Comments

Popular posts from this blog

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ

தாமிரசபை செப்பறை , திருநெல்வேலி

உலகின் முதல் நடராஜமுர்த்தி தரிசனம். அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில், செப்பறை (தாமிரசபை) இராஜவல்லிபுரம். தில்லை ஆனந்த கூத்தப் பிரான் செப்பறை வந்து சேர்ந்த வரலாறு  சுருக்கமாக.... உலகின் முதல் நடராஜர் சிலை. (சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை..) அழகிய கூத்தர் எழுந்தருளியுள்ள தாமிரசபையே -செப்பு அறை- செப்பறை என்று தலத்தின் பெயரானது. சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான். அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான். திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் க