Skip to main content

ஆதித்தநல்லூர் பறம்பு (தொல்லியல் பார்வை)

ஆதித்தநல்லூர் பறம்பு (தொல்லியல் பார்வை)
  ” நம்ம பறம்புலே தங்கம் கிடைக்குதாம்ல “ ஆடு மேய்ப்பவரின் குரல் கேட்கிறது .
  தூத்துக்குடி மாவட்டம் , ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மணல்மேடு பகுதியில்தான் இந்த குரல் கேட்குது.
    தமிழர் வரலாற்றில் , வரலாற்றுக்கு முந்தைய காலமான (prehistoric) கி.மு. 1000 இற்கு முற்பட்ட தமிழன் வாய்ந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளது இப்பகுதி.ஆச்சரியமா இருக்கா,,,, . 114 ஏக்கர் பரப்பளவுள்ள இம்மேடு ” ஆதித்தநல்லூர் பறம்பு “ என்றழைக்கப்படுகிறது .இம்மேட்டினுள் புதைந்து கிடக்கும் பொருட்கள்தான் எவை எவை?.....
தாழிகள்
      தாழிகளப் பற்றி முதல்ல தெரிஞ்சுக்குவோம்.நம்ம வீடுகளில் இருக்கும் நெல் தாழியைப் போலதான் இருக்கும் முதுமக்கள்.தாழிகள்.இவைகள் சுடுமண்ணால் ஆனவை.. ஆற்றங்கரை , குளக்கரையில் கிடைக்கும் களிமண்ணால் செய்யப்பெற்று வெயிலில் உலரவைத்து , நன்றாக காய்ந்தபின்பு சூளையினுள் வைத்து சுட்டு எடுப்பர் . மண்பாண்டங்களும் இவ்வாறே செய்யப்படுகின்றன .
   இப்பானை மற்றும் தாழிகளில் அக்காலத்தில குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள் , உருவங்கள் பொறிக்கப்படும் . தானியங்களையும் , விளைபொருட்களையும் வைத்துப் பாதுகாக்கும் தாழிகள் 3 அடி உயரத்திலிருந்து 5 அடி உயரம் வரை செய்யப்பெற்றன . இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் தாழிகள் 3 அடி உயரத்திலிருந்து 4 அடி உயரம் வரை செய்யப்பட்டன . தாழியின் வாயளவு 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை அமைந்தன .
பெருங்கடற்படைச் சின்னங்கள்
  ஆதித்தநல்லூரில் காண்ப்பெறும் முதுமக்கள் தாழிகள் மற்றும் அதனுள் காணப்பெறும் தங்கம் , இரும்பு , வெண்கலம் ஆகியவற்றில் செய்யப்பெற்ற பொருட்களைக் கொண்டு அக்கால மக்கள் உலோகத்தின் பயனைத் தெரிந்திருந்தனர் என்பதை நாம தெரிஞ்சுக்கலாம். கி.மு . 1000 முதல் கி.மு . 300 வரையிலான காலம் தமிழகத்தின் இரும்புக்காலம் அல்லது பெருங்கடற்படைச் சின்னக்காலம் (Megalithic) ஆகும் . இக்காலத்தில் இறந்தவர்கள் தாழியில் புதைக்கப்பட்டனர்; கற்பதுக்கைகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .
   இத்தாழிகளுல் ஆயுதங்கள் , அணிகலன்கள் , தொழில்நுட்ப உபகரணங்கள் , வெண்கலப் பொருட்கள் , விவசாயத்திற்குரிய உபகரணங்கள் , உணவுப்பொருட்கள் , மணி , மிருகங்களின் வடிவத்திலான பொம்மைகள் , பூக்கள் , சட்டிகள் , குடுவைகள் , விளக்குகள் ஆகியன வைக்கப்பட்டன .
   இதிலே சிறப்பு என்னன்னா அயல்நாட்டு உரோம நாணயங்கள் , நவரத்தின மணிகளும் கிடைச்சிருக்கு.இதிலேயிருந்து வெளிநாட்டுத் தொடர்பு நம்மபகுதிக்கு இருந்திருக்குன்னு அறிய முடியுது. .
   2004 இல் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் , ஆதித்தநல்லூர் பறம்பில் உள்ள முதுமக்கள் தாழியின் கல்லறைகள் மூன்று அடுக்குகளாக இருந்ததையும் கீழே உள்ள முதல் அடுக்கு 10 அடி ஆழத்திற்குக் கீழாகவும் மேலே 10 அடிக்குள் இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டன . தொல்லியல் அறிஞர் தி . சத்தியமூர்த்தி இவ் அகழ்வாய்வினைத் தமது குழுவினருடன் மேற்கொண்டார் . 157 தாழிகள் எடுக்கப்பட்டன் . 50 தாழிகள் உடையாமல் எடுக்கப்பட்டது . 15 தாழிகளில் மனித எலும்புக் கூடுகள் , சிலவற்றில் உமி , நெல் கொண்ட சிறுகலயங்கள் , இரும்புக் கருவிகள் , வேல்முனைகள் , கட்டாரிகள் இருந்தன . பானையொன்றில் காணப்பெற்ற கோட்டுவங்களில் மான் , முதலை , நாரை , பல்லி , நெற்கதிர் , பெண்ணின் உருவம் கண்டறியப்பெற்றன . தாழிகள் மீது காணப்பெற்ற வரவுகள் (Motifs) தருமபுரி , ஈரோடு மாவட்டத்திலுள்ள குகைகளில் காணப்படும் குகை ஓவிய கோட்டுவங்கள் போல அமைந்துள்ளன . ஆதித்தநல்லூரில் மேலும் அகழ்வாய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டால் , தொல்லியல் உலகம் ஆச்சரியப்படும் அளவிற்கு உலக வரலாற்றுக்கான ஆதாரங்கள் வெளிவரும் .
  தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழியின் உட்புறம் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ளும் விதத்தில் கைப்பிடி போன்ற வடிவமைப்பு உள்ளது . இவ்வடிவம் இதுவரை வேறெங்கும் கிடைக்காத அமைப்பாகும் . வயது முதிந்தவர்களை நோயாளிகள் தாழியினுள் வைக்கப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டனர் என்பதை இத்தாழி உறுதிசெய்கிறது .
மக்களின் தொழில்
     அக்கால மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டும் , மாடு , ஆடுகளை வளர்த்தும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பனத் தாழிகளுள் கிடந்த மண்வெட்டி , கலப்பைக்கொழு , அறிவாள் , கடப்பாறை ஆகியன் மூலம் அறியலாம் .
தொழில்நுட்பக் கருவிகள்
   நுட்பமான வேலைகளைச் செய்வதற்கு ஊதுகுழல் , குறடு , சுத்தியல் , அறம் , உளி , இளைப்புளி முதலிய பயன்படு பொருட்கள் கிடைத்துள்ளன .
வெண்கலப் பொருட்கள்  
    வெண்கலத்தால் ஆன பாத்திரங்கள் , பூக்கிண்ணங்கள் , யானை , புலி , மான் , எருமை , மாடு , ஆடு ஆகிய உருவங்களும் ஒலி எழுப்பும் மணியும் கிடைத்துள்ளன .


அணிகலன்கள்
   மக்கள் அணியும் அணிகலன்களான வளையல் , காப்பு , கடாகல் , மோதிரம் , நவராத்தின மணிகள் தாழியினுள் கிடைத்துள்ளன .
ஏற்றுமதித் துறைமுகம்
   கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மக்கள் , தங்கம் , வெண்கலம் , இரும்பு , ஆகிய உலோகத்தினைப் பயன்படுத்தியுள்ளனர் .பண்பட்ட நாகரீகத்தின் வெளிப்பாடுகளே இவைகள் . தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்றுள்ளன என்பதற்காதாரமாக உரோம நாணயங்கள் கிடைத்துள்ளன . தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களின் நாகரீகம் ஆற்றங்கரை நாகரீகம் அல்லது நதிக்கரை நாகரீகம் ஆகும் . தாமிரபரணி கடலில் கலந்த கொற்கைக் குடாப் பகுதியின் கொற்கை தலைசிறந்த துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்து தாமிரபரணி ஆறு, ஆதித்தநல்லூர் வழியாக ஓடிச்சென்று கொற்கையையும் , குடாவையும் இணைத்தது . கொற்கை வளைகுடா நிலப்பகுதிக்குள் ஐந்து மைல் உள்வாங்கியிருந்தத்து . கொற்கைத் துறைமுகம் வந்த சிறிய கப்பல்களும் படகுகளும் ஆதித்தநல்லூர் வரை வந்தன . படகுத்துறை போன்ற அமைப்பும் அழமான பகுதியும் இப்பறம்பினருகே இருக்குங்க. ஆதித்தநல்லூர் பறம்பிலும் வல்லநாடு மலைப்பகுதியிலும் இரும்பை உருக்கி எடுத்ததற்கான ஊது உலைகள் இருந்ததற்கான ஆதாரங்களும்  இரும்பு கழிவுகளும் ஏராளமாகக் குவியலாகக் காணப்பெறுகின்றன . இவற்றின் மூலம் இரும்பு ஆயுதத் தொழிற்சாலை இங்கிருந்து என்பதைக் காட்டுகிறது .
ஆயுதங்கள்
    வாள் , கத்தி , கட்டாரிகள் , வேல் திரிசூலம் , எகு , இருபுறம் கூர்மையான வாள் , மீனெறி வேல் , எறிவேல் ஆகியனவும் எதிரிகள் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு மீண்டும் எறிந்தவர் கைக்குத் திரும்பிவரும் “ பூமராங் “ என்னும் ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் தாழிகளுள் கிடைத்துள்ளன .
   ” ஆதிச்சநல்லூர் ” ஊரும் பறம்பும் வடநாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்திருக்குமேயானால் , மிகப் பழமையான சிறப்பு போற்றப்பட்டிருக்கும் . உலகப் பாரம்மரியச் சின்னங்களுள் ஒன்றாகிப் போயிருக்கும் . இப்பொழுதுள்ள ஆடு மாடு மேயுமிடமாக இருக்காது.வடநாட்டான் தமிழனின் சிறப்பை போற்றான்..

  தற்போது தமிழக அரசு அங்கு கிடைத்த அரிய பொருட்களை அவ்விடத்திலேப் பாதுகாத்திட அகழ்வைப்பக அருங்காட்சியகம் அமைத்துள்ளது.அவசியம் ஒருமுறை பார்க்க வேண்டிய இடம்.

Comments

Popular posts from this blog

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ

தாமிரசபை செப்பறை , திருநெல்வேலி

உலகின் முதல் நடராஜமுர்த்தி தரிசனம். அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில், செப்பறை (தாமிரசபை) இராஜவல்லிபுரம். தில்லை ஆனந்த கூத்தப் பிரான் செப்பறை வந்து சேர்ந்த வரலாறு  சுருக்கமாக.... உலகின் முதல் நடராஜர் சிலை. (சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை..) அழகிய கூத்தர் எழுந்தருளியுள்ள தாமிரசபையே -செப்பு அறை- செப்பறை என்று தலத்தின் பெயரானது. சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான். அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான். திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் க