Skip to main content

சாத்தான்குளம் அருகே கொம்பன்குளத்தில் ஸ்ரீ கோதா சமேதா ராஜகோபாலசுவாமி கோயிலில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு


சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்பன்குளத்தில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கல்வெட்டுக்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஆறுமுகநேரி முனைவர் த.த.தவசிமுத்து தெரிவித்ததாவது,
சாத்தான்குளத்திலிருந்துசுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் கொம்பன்குளம் என்ற சிற்றூர் உள்ளது.இங்கு ஸ்ரீ கோதாசமேதா ராஜகோபாலசுவாமி திருக்கோயில் சிற்பக்கலை நயத்துடன் அமைந்துள்ளது.பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்று, விஜயநகர காலத்தில் மண்டபங்களும் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் பெரும்பகுதி வெள்ளைக்கற்களால் அமையப்பெற்றது.
மூலவராக ஸ்ரீராஜகோபாலசுவாமி நின்ற திருக்கோலம்.கிழக்கே திருமுக மண்டலம்.வலப்புறம் ஸ்ரீகோதாநாச்சியார் இடப்புறம் பெரிய திருவடியான கருடாழ்வார் கை கூப்பி சுவாமியைக் கும்பிட்டவாறு உள்ளார்.இக்கோயிலின் மற்றொரு சிறப்பு சக்கரத்தாழ்வார் தனிசன்னிதியில் அருள் பாலிப்பது. திருமாலின் ஆயுதங்கள் ஐந்து.ஐம்படைகளெனப்படும்.அவை சங்கு, சக்கரம், கதை,வில்,மற்றும் வாள் ஆகியனவாகும்.சங்கு பாஜ்சசைன்னியம் என்றும் சக்கரம் சுதர்சனம் என்றும் கதை கெளமேதகி என்றும் வில் சாரங்கம் என்றும் வாள் நர்த்தகம் என்றும் அழைக்கப்படுகின்றன.திருமாலின் வலது கரத்தில் உள்ள சக்கரத்தில் உறைபவர் சுதர்சனர்.இந்த சுதர்சனர் பஞ்சாயுதங்களின் தலைவனாவார்.எதிரிகளை வெற்றி கொள்வதற்கும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடையவும் சுதர்சன ஹோமங்கள் செய்யப்படுகின்றன.இவரே சக்கத்தாழ்வார், சக்கரராஜா, சக்கரபாணி, சுதர்சனமூர்த்தி,ஹேதிராஜன்,சுதர்சனராஜன் என்றும் அழைக்கப்படுவார். அவருக்கான தனி சன்னிதி போன்ற அமைப்பு கருவறைக்கு வெளியே வடபுறம் பந்தல்மண்டப அமைப்பில் உள்ளது.கிழக்கே பார்த்த நுழைவு வாயில்,வாயிலின் முன்புறம் கேரளபாணீயில் ஓடு வேயப்பட்ட பந்தல் அமைப்பு.வாசல் வழியாக உள்ளே நுழையும் முன்பாக பலிபீடம்,உள்ளே சென்றால் விழாக்கள்,சுவாமியின் திருக்கல்யாணம் நிகழ்த்தப் பெற்ற வசந்தமண்டபம் நெடிதுயர்ந்த தூண்களுடன் உள்ளன.மண்டபத்தின் மேற்புரம் கூடுகளுக்குப்பதிலாக சிறிய குரங்கின் சிற்பம்.தொடர்ச்சியாக முகமண்டபம்.இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் இராமன்,சீதாதேவி, இலட்சுமணன்,அனுமன்,சுக்கிரீவன்,அரசன் ஆகியோரது சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அனைத்தும் வெள்ளைக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளதால் அதனுடைய பல பகுதிகள் தேய்ந்தும் உடைந்தும் போயுள்ளன.தொடர்ந்து சென்றால் மகாமண்டபத்தினுள் நுழையலாம். தொடர்ந்து அர்த்தமண்டபமும் கருவறையும் உள்ளது. அர்த்தமண்டபம் கருவறையைச் சுற்றி வர வேண்டுமென்றால் வெயில்,மழை படாமல் உள்ளேயேச் சுற்றி வரலாம்.இத்தகைய மூடியத் திருச்சுற்று பிரசட்சண பாதமாக அமைந்துள்ளது.இவ்வகை சாந்தார வகைக் கோயிலாகும். கருவறை வாசல் சுவரோடு அரைத்தூணும் வெட்டுப் போதிகையுடன் அதிட்டானம் எளிய முறையில் அமைந்துள்ளது.மேலும் சுவரில் கோட்டப் பஞ்சரமும் அதில் இறையுரு வைப்பதற்கான எவ்வித பள்ளமோ இல்லை. தூண்களில் உள்ள போதிகைகள் பிற்கால பாண்டியர்கால வெட்டுப் போதிகையுடனும்,விஜயநகரக் கால பூமுனைப் போதிகையுடனும் உள்ளன. கருவறை மீதுள்ள விமானம் ஏகதள விமானம்.சிகரம் வட்டமாக இருக்கும் வேசர அமைப்பு. கிரீவத்தின் நான்கு மூலைகளிலும் கருடாழ்வாரும்,கிரீவக் கோட்டத்தில் தெய்வத்தின் உருவங்களும் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வடகிழக்குப்பகுதியில் தலவிருட்சமாக ஆலும் வேம்பும் இணைந்து உள்ளன.தீர்த்தக்கிணறும் அதனருகில் உள்ளது மரத்தினடியில் விநாயகர் சிலையும், சிறிய நாகர்கள் சிலைகளும் காணப்படுகின்றன.மிகப்பழமையான பீங்கானிலான தாழி ஒன்றும் இங்கு காணப்படுகின்றது.
கருவறையைச் சுற்றி உள்ளே வரும்போது தற்காலக் கல்வெட்டு ஆறு வரிகளில் இந்த நூற்றாண்டு எழுத்தமைதியுடன் காணப்படுகிறது. இக்கோயிலுக்கான வழிபாடு கட்டளை மேற்கொள்வது குறித்தும் ‘’தனைக்கன்குளம்’’ என்ற கோயிலுக்கான கிராமநிலம் குறித்த செய்தியும் அதில் உள்ளது.
இயற்கை வளமிக்க கொம்பன்குளம் என்ற ஊரின் மத்தியில்தான் முற்காலத்தில் இக்கோயில் அமைந்திருந்தது. கோயிலைச் சுற்றிலும் வழிபடும் மக்களின் குடியிருப்புக்கள் ,கோயிலைச் சார்ந்தோரின் குடியிருப்புக்களும் அமைந்திருந்தன.தினமும் பாசுரங்களும், வேதங்களும், ,யாகங்களும் நிகழ்த்தப்பெற்றன.கால வெள்ளத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்,படையெடுப்பு போன்ற மனிதச் சீற்றங்கள், பெருமழை, மழை பெய்யாமை போன்ற இயற்கைச் சீற்றங்களினால் இவ்வூர் வளமிக்க வீதிகளையும், விழாக்களையும் இழந்துள்ளன.
கி.பி 17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த விஜயநகரக் காலத்திலான குறடு பந்தல் மண்டபம்,கோயிலுக்கு வெளியே முன்புறம் எழில்மிகு சிற்ப நயத்துடன் நுட்பமான கட்டடக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது. கம்புப்பகுதி வட்டம்,சதுரம்,பதினாறுப்பட்டை என பதினாறு தூண்களுடன் செவ்வக வடிவிலான,மத்தியில் திருவிழாக் காலங்களில் சுவாமி எழுந்தருளுவதற்கான குறடு உள்ளது. தரையைச் சுற்றிலும் நீர் செல்வதற்கான ஓடை அமைப்பு உள்ளது.குறடின் மேற்புற படிக்கட்டின் இரு ஓரத்தில் யானையின் தலையின் அமைப்பு தும்பிக்கையின் நீட்டிய அமைப்பும் காணப்படுகின்றது. வடபுறம் தும்பிக்கை ஒரு சிறுவனைத் தூக்கி வைத்திருப்பது போன்ற சிறிய சிற்ப நுட்பம் தமிழனின் கலைக்கோர் சான்று.இக்குறட்டின் தூணின் மாலசுதானம் பகுதியில் இம்மண்டபத்திக் கட்டிய வீரமுடி அய்யன் என்ற அரசன் எளிய அடியவர் போல கழுத்தில் உத்திராட்சம் அணிந்துள்ளார்,வேறு எவ்வித அணிகலனும் பூநூலும் அணியவில்லை. அரசர்கள் அணிவது போல இடுப்பில் ஆடையை அழகிய மடிப்புடன் அணிந்து ராஜகோபாலசுவாமியை நோக்கிக் கும்பிட்ட கரத்துடன் முழு உருவச்சிற்பமும் அதன் தலைக்கு மேலே ’’வீரமுடி அய்யன் சதா சேவை ’’ என்ற கல்வெட்டுப் பொறிப்பும் உள்ளது மேலும் தூணுக்குக்கீழே கொல்லம் என்று தொடங்கும் கல்வெட்டு அம்மண்டம் எழுப்பப்பட்ட காலத்தைக் குறிக்கின்றது.இது வெள்ளைக் கல்லால் அமைக்கப்பட்டதனால் எழுத்து தேய்ந்து போயுள்ளது. விஜயநகர காலத்தில் கி.பி.17 ஆம் நூற்றாண்டில்தான் பெருமாள் கோயில்களில் குறடினைக் கட்டுவித்து,அதன் தூண்களில் தங்களுடைய சிற்பங்களை அமைத்துக் கொண்டனர்.தற்காலத்தில் மிகவும் வறண்ட பகுதியாக,வானம் பார்த்தப் பூமியாகக் காணப்படும் கொம்பன்குளம் முற்காலத்தில் வளமிக்கப் பகுதியாக இருந்ததை எழில்மிக்க இக்கோயிலின் மூலம் காணலாம்.இலக்கியங்கள் போன்று கோயில்களும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன.
Like ·  · 

Comments

Popular posts from this blog

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ

தாமிரசபை செப்பறை , திருநெல்வேலி

உலகின் முதல் நடராஜமுர்த்தி தரிசனம். அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில், செப்பறை (தாமிரசபை) இராஜவல்லிபுரம். தில்லை ஆனந்த கூத்தப் பிரான் செப்பறை வந்து சேர்ந்த வரலாறு  சுருக்கமாக.... உலகின் முதல் நடராஜர் சிலை. (சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை..) அழகிய கூத்தர் எழுந்தருளியுள்ள தாமிரசபையே -செப்பு அறை- செப்பறை என்று தலத்தின் பெயரானது. சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான். அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான். திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் க