Skip to main content

கொன்றை வேந்தன்

2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து 

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை 
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. 

உயிர் வருக்கம் 

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. 
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. 
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர். 
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. 
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். 
8. ஏவா மக்கள் மூவா மருந்து. 
9. ஐயம் புகினும் செய்வன செய். 
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு. 
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். 
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. 
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. 

ககர வருக்கம் 14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை. 
15. காவல்தானே பாவையர்க்கு அழகு. 
16. கிட்டாதாயின் வெட்டென மற. 
17. கீழோர் ஆயினும் தாழ உரை. 
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. 
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். 
20. கெடுவது செய்யின் விடுவது கருமம். 
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. 
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. 
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி. 
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. 
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை. 

சகர வருக்கம் 26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை. 
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. 
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. 
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. 
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். 
31. சூதும் வாதும் வேதனை செய்யும். 
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும். 
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. 
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண். 
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். 
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். 

தகர வருக்கம் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. 
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. 
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. 
40. தீராக் கோபம் போராய் முடியும். 
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. 
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும். 
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும். 
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். 
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. 
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. 
47. தோழனோடும் ஏழைமை பேசேல். 

நகர வருக்கம் 48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும். 
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. 
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை. 
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. 
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. 
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு. 
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. 
55. நேரா நோன்பு சீராகாது. 
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல். 
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர். 
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை. 

பகர வருக்கம் 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். 
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். 
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும். 
62. பீரம் பேணி பாரம் தாங்கும். 
63. புலையும் கொலையும் களவும் தவிர். 
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். 
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். 
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். 
67. பையச் சென்றால் வையம் தாங்கும். 
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். 
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல். 

மகர வருக்கம் 70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண். 
71. மாரி அல்லது காரியம் இல்லை. 
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை. 
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. 
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். 
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம். 
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. 
77. மேழிச் செல்வம் கோழை படாது. 
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு. 
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். 
80. மோனம் என்பது ஞான வரம்பு. 

வகர வருக்கம் 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். 
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். 
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். 
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும். 
85. உரவோர் என்கை இரவாது இருத்தல். 
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. 
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை. 
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை. 
89. வைகல் தோறும் தெய்வம் தொழு. 
90. ஒத்த இடத்து நித்திரை கொள். 
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம். 

Comments

Popular posts from this blog

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா நாகரிகத்தில் கொற்கை முத்து காணப்ப

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ

தாமிரசபை செப்பறை , திருநெல்வேலி

உலகின் முதல் நடராஜமுர்த்தி தரிசனம். அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில், செப்பறை (தாமிரசபை) இராஜவல்லிபுரம். தில்லை ஆனந்த கூத்தப் பிரான் செப்பறை வந்து சேர்ந்த வரலாறு  சுருக்கமாக.... உலகின் முதல் நடராஜர் சிலை. (சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை..) அழகிய கூத்தர் எழுந்தருளியுள்ள தாமிரசபையே -செப்பு அறை- செப்பறை என்று தலத்தின் பெயரானது. சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான். அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான். திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் க